ஐடி பார்க் ஏரியாவில் யானைகள் ஜாலி வாக்..!

கோவை ஜீரணத்தம் ஐடி பார்க் அருகே உள்ள முட்புதர் காட்டில் மூன்று யானைகள் இன்று புகுந்தன. இந்த யானைகள் அந்தப் பகுதியில் உள்ள சாக்கடை குட்டையில் குளித்து நீராடி முள்காட்டுக்குள் ஜாலியாக வலம் வந்தன . பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் இருந்து

வழி தவறி வந்த இந்த யானைகள் திரும்பவும் வனப்பகுதி செல்ல முடியாமல் ஊருக்குள் சுற்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயன்ற போது திடீரென காணாமல் போய்விட்டன. யானைகளை தேடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுப்பகுதி கிராமங்களில் யானை நடமாட்டம் இருக்கிறது உஷாராக இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *