ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று முதல் வேலை செய்து வருகின்றனர். “தாயுமானவர் திட்டத்தினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வலியுறத்தி வரும் 10ம் தேதி கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: 110வது விதியின் கீழ் ரேஷன் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் தர வேண்டும். 35…

Read More

கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்

கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்தவர் சேஷகிரி (70), ஆடிட்டர். இவர் பெங்களூரில் உள்ள மகனை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் ஒரு மாதம் முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இவர் வீட்டிற்கு வரவில்லை. கடந்த 4ம் தேதி இவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையலறையில் பயன்படுத்தும் 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளை பொருட்கள். திருடப்பட்டிருந்தது. மின்சார…

Read More

கே.என் நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், திருச்சியில் உள்ள முக்கிய அலுவலகங்கள்…

Read More

கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொள்ளை…

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சேஷாத்ரி (73), ஆடிட்டர் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இதன் கீழ் தளத்தில் யாரும் இல்லாத நிலையில், மூன்றாவது தளத்தில் சேஷாத்ரி மட்டும் குடியிருந்து வருகிறார். இவரது மகன் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சேஷாத்ரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் புறப்பட்டு சென்றனர். பின்னர், அவர்கள் நேற்று குடும்பத்துடன் கோவை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி…

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (40), ஆட்டோ ஓட்டுநர். இவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு இன்று காலை வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து எடுத்து வந்து இருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். பெரியசாமி, தன்னை பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட சிலர்…

Read More

கோவை போலீசார் நைட் ரவுண்ட்ஸ், புட் பேட்ரோல் தீவிரம்…!

கோவை நகரில் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக, போதை பொருட்கள் கடத்தல், குற்ற செயல்கள் அதிகமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் இரவு காவல் பணியில் அலட்சியமாக இருப்பதால் அசம்பாவிதம், மோதல் தடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதை தொடர்ந்து மாநகரில் இரவு ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஜி.எச். பிரதான ரோடு குறிப்பாக அவினாசி ரோடு பகுதிகளில் போலீசார் இரவில் அடிக்கடி சோதனை செய்கின்றனர். சந்தேக நபர்கள் வீடியோ பதிவு செய்யப்படுகிறார்கள்….

Read More

சிறுவாணியில் வறட்சி: 50 சதவீதம் குடிநீர் மட்டுமே சப்ளை…

சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 29 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அணையின் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக நீர் எடுப்பு 50 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டது. குடி நீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டி இருக்கிறது. வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறைவாக…

Read More

டாஸ்மாக் விற்பனையாளர்கள் 60 பேர் சஸ்பெண்ட்…!

கோவை கலால் மாவட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்டங்கள். அடங்கியிருக்கிறது. இந்த மாவட்டங்களில் சுமார் 1100 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் குறைந்த பட்ச விற்பனை விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் கூடுதலாக 10 ரூபாய், 20 ரூபாய் வாங்க கூடாது. பீர் பாட்டில்களுக்கு கூலிங் சார்ஜ் என அதிக கட்டணம் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி மதுபானங்களுக்கு…

Read More

கோவை நாகர்கோவில் ரயில் வழித்தடம் மாற்றம்…

கோவை நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் டிராக் பராமரிப்பு காரணமாக நாளை வரும் 8 10, 12ம் தேதிகளில் மாற்று பாதையில் இயக்கப்படும். காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவை திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி, பழனி மார்க்கமாக இயக்கப்படும். கோவை வடக்கு. பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர். கொடுமுடி புகலூர் கரூர் பாளையம் மற்றும் எரியோடு ஸ்டேஷன் வழியாக இந்த ரயில் இயங்காது. மாற்று…

Read More

காவலன் செயலி 45091 பேர் பதிவிறக்கம்…

மாநகரில் தனியாக வசிக்கும் முதியோர் பாதுகாப்பை உறுதிசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், 45,091 பேரை, எஸ்ஓஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். கோவை மாநகரில் தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மாநகர போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநகரில் தனிமையில் வசிக்கும் 990 முதியோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது முழுமையான விவரங்களை சேகரித்துள்ளனர். காவல்நிலையம் வாரியாக இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் முதியோர் பாதுகாப்பு நடவடிக்கையை…

Read More