கோவை மாவட்டத்தில் 14 முதல் 22 ரவுண்ட்ஸ் ஓட்டு எண்ணிக்கை…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read More

கோவை சிறுவாணி அணையில் கடும் வறட்சி. பாதாளத்தில் நீர்மட்டம்…!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி. கடந்த சில மாதம் முன்பு உச்சத்தில் இருந்த அணையின் நீர்மட்டம் இப்போது13.30 அடியாக குறைந்துவிட்டது. அதாவது கடல் மட்ட உயர கணக்கின்படி 867.48 மீட்டர் (slm) ஆக இருக்கிறது. இன்னும் 863.40 மீட்டர் வரை குடிநீர் பெற முடியும். தற்போது தினமும் 4.6 கோடி லிட்டர் குடிநீர் தினமும் பெறப்படுகிறது. அணையில்…

Read More

கோவையில் போலி வேட்பாளர்களால் பிரச்சனை

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் ராகுல் காந்தி. இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் நான் போட்டியிட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சில சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் தேர்தல் களத்தில் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டார்கள். அடையாள அட்டை மற்றும் பூத் ஏஜென்ட் பாஸ் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சியினருக்கு பெற்றுத் தரும்…

Read More

கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு…!

கோவை மாவட்டத்தில் 3540 வாக்குப்பதிவு மையங்களில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 18.15 சதவீதம் வாக்கு பதிவானது. 11 மணி நிலவரப்படி 38.62 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.கடந்த காலங்களை விட தற்போது அதிக அளவு வாக்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைதியாக எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில்…

Read More

2 மணி நேரத்துக்கு ஒரு முறை ஓட்டு சதவீதம் அறிவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3563 ஒட்டு சாவடிகள் இருக்கிறது. இவற்றில் 183 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் உள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் நாளை ஒட்டு பதிவு நடக்கவுள்ளது, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படும். காலை 5.30 மணிக்கு ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்படும். இதில் எத்தனை ஏஜன்டுகள் இருந்தாலும் அவ்வளவு பேரும் மாடல் மெசினில் ஓட்டு போடலாம். இந்த ஒட்டுக்கள் அரை மணி நேரத்திற்குள்…

Read More

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள்…!

கோவை மாவட்டத்தில் 27.33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,32,220 ஆண் வாக்காளர்கள், 1,47,924 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தினர் என 2,82,179 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,47,868 ஆண் வாக்காளர்கள், 1,59,647 பெண் வாக்காளர்கள், 101 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 3,07,616 வாக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2,05,189 ஆண் வாக்காளர்கள், 2,16,834 பெண் வாக்காளர்கள், 115 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 4,22,138 வாக்காளர்கள் இடம் பெற்றனர். கோவை…

Read More

கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் ஓட்டு சாவடிகள்…15223 ஓட்டு மெஷின்கள் குவிப்பு …!

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெசின்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக, அதற்கென ஒதுக்கப்பட்ட ஸ்டராங்க் ரூம்களில் வைக்கப்பட்டிருந்தது . மேட்டுப்பாளையம் தொகுதிக்கு என்எல்பி பாலிடெக்னிக், சூலூர் தொகுதிக்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகம், கோவை தெற்கு தான் சட்டமன்ற தொகுதிக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,…

Read More

தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்தா…? பதில் தர கோவை கலெக்டர் மறுப்பு

கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக நடப்பதாக புகார் இருந்துள்ளது. திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அம்மன் அர்ஜூனன், சுயேட்சை வேட்பாளர் புகார் தொடர்பாக நேற்று கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது கலெக்டர், 30 கோடி ரூபாய் பணத்துடன் வாகனம் சென்றதா, வெளியூர் நபர்கள் தங்கியிருந்தார்களா, ஒட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. ஆனால்…

Read More

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க… சுயேச்சை வேட்பாளர் நடுரோட்டில் போராட்டம்…!

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோடு ரவுண்டானா முன்பு கோவை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் என்பவர் இன்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தனி ஆளாக அவர் ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டார். அப்போது அவர் கூறியதாவது:கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக செந்தில் பாலாஜி பணத்தை வாரி இறக்கிறார். ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறார். அவருக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வேண்டும் என மிரட்டுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது நான் பணம்…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு மெஷின்கள் அனுப்பி வைத்தனர்

கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் இந்த வாக்கு சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டு மிஷின்கள் சப்ளை செய்யும் படி இன்று துவங்கியது. மாவட்ட அளவில் 15223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த இயந்திரங்கள் இன்று காலை 11:00 மணி முதல் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் 330…

Read More