வெள்ளலூரில் அகழ்வாராய்ச்சி: பழங்கால பொருட்கள் சேகரிப்பு…
தொல்லியல் துறை சார்பில் கோவை வெள்ளலூர் உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. அகழாய்வின் போது கண்டெக்கப்படும் தொல்பொருட்கள் மற்றும் முக்கிய கலைப்பொருட்களின் பட்டியலை டெல்லியில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறை இயக்குனரகத்திற்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை வெள்ளலூர் பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த வெள்ளலூர் பகுதி சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மற்றும் நொய்யல் நதிக்கரையோம் அமைந்துள்ள பழமையான…
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு…
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. ‘இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000, எஸ்.சி, எஸ்.டி.., பிரிவினருக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகல்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன்…
கோவையில் போதை மருந்து ஊசி பதுக்கிய வாலிபர் கைது…
கோவை காந்திபுரம், ராம்நகர் கோகுலம் வீதி பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்டூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் போதைக்கு பயன்படுத்தக்கூடிய ‘மெபென்டர்மைன் சல்பேட் மற்றும்…
கோவையில் பணம் கேட்டு 2 வாலிபர்களை கடத்திய ‘போலீஸ் கேங்க் கைது…!
கோவை போத்தனூர் அடுத்த சித்தன்புரம், இந்திரா நகரை நவீன் (29). இவர், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தார். கடந்த 8ம் தேதி மதியம், நவீனின் அக்கா பரமேஸ்வரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், “உன் தம்பி நவீனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிரோடு வேண்டும் என்றால் உடனடியாக ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும்” என்று கூறிவிட்டு இணைப்பை…
கோயம்புத்தூர் பைபாஸ் ரோடு… NOC தர ரயில்வே, கெயில், ஆயில் கம்பெனிகள் தாமதம்…!
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு எல் அண்ட் டி ரோடு என்ற பெயரில் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பைபாஸ் இனி கோயம்புத்தூர் பைபாஸ் என்ற பெயரில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படவுள்ளது. இதற்கான திட்டங்கள் தயார் செய்த நிலையில், ஒன்றிய அரசின் துறைகள் தடையின்மை சான்று, அனுமதி வழங்குவதில் முட்டுகட்டை போட்டு உட்கார்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் நடத்திய பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை. கடிதங்களை கிடப்பில் போட்டு ஒன்றிய…
crime prevention: கோவை பிளாட்பார்மில் வாட்டர் ஸ்பிரே…
கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி. பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி தாக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில்…
சிங்கப்பெண் படைக்கு கோவையில் 3 குழு…
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை இன்று தமிழக முதல்வர் விஜய் சென்னையில் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை புறநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் ஒரு குழுவும், கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தலா ஒரு குழு என இரண்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் ஒரு பெண் எஸ்.ஐ. தலைமையில், இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்பு…
Ginder app: அதுக்கு போன ஐ டி வாலிபருக்கு அடி உதை பணம் போச்சு…
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது செல்போனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (கிண்டர் ஆப்) செயலியை பயன்படுத்தி வந்தார். அப்போது, வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த வாலிபர் ஐடி ஊழியரை பிகே புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வரவழைத்தார். அங்கே ஐடி நிறுவன ஊழியர் சென்ற போது மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் திடீரென ஐடி…
Mins violation: கோவை மாவட்டத்தில் 11 கல் குவாரிகளுக்கு நோட்டீஸ்…!
கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி…
கோவையில் வீட்டிலேயே நாட்டு வெடி குண்டு தயாரித்த கில்லாடி கைது…!
கோவை சூலூர் பள்ளபாளையம் பஞ்சாயத்து ஆபீஸ் வீதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). இவர் கோயில் விழாக்களில் வெடி வைக்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக பல்வேறு பகுதிகளில் நாட்டு வெடிகளை வாங்கி விழா காலங்களில் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இவர் சொந்தமாகவே நாட்டு வெடி ரகங்களை தயாரித்து பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணக்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு இருந்தது…
