கோவையில் 20265 வாக்காளர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது, இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், போக்குவரத்து போலீசார், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் போக்குவரத்து கழக ஊழியர்களும் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 28 பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு…

Read More

கோவை மாநகராட்சி கஜானாவை காலி செய்யும் ஆகாய தாமரை…!

கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரிய குளம் படகு துறையாக செயல்படுகிறது. பூங்கா, வாக்கிங் தளம் என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து பயன்பாட்டிற்கு வந்தும் இந்த குளங்களில் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. கோவை அரசு மருத்துவமனை கழிவு, சாக்கடை, பல்வேறு நிறுவனங்களின் கழிவுகள், நகரின் தெற்கு, மத்திய பகுதி சாக்கடைகளின் சங்கமமாக இந்த இரு குளங்களும் இருக்கிறது. இங்கே கழிவு நீரை சுத்திகரிக்க பல கோடி…

Read More

KCP infra நிறுவனம் கட்டமைத்த சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூனில் திறப்பு…!

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி பகுதியில் 1140 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி பாதையாக மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. 52.90 கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் முதல் எருக்கம்பெனி வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு, என்எஸ்.ஆர் ரோடு, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக இந்த மேம்பாலம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த…

Read More

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள்… கோவையில் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் யன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது . ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 70…

Read More

தவறி விழுந்த மூச்சு திணறிய இரு குழந்தைகள் சாவு

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஓம்பிரசாத் மற்றும் விருத்திகா (23) தம்பதியினருக்கு 52 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரியா ஸ்ரீ என பெயர் வைத்தனர். குழந்தைக்கு சற்று மூச்சு திணறல் இருந்ததாக தெரிகிறது. நேற்று விருத்திகா குழந்தைக்கு பால் கொடுத்தார் .‌ சிறிது நேரத்தில் குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது. பதறிப் போன அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது வழியில்…

Read More

கோவையில் ஓட்டு மெஷின்கள் பாதுகாப்பா இருக்குதா… வேட்பாளர்கள் சோதனை…!

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில்…

Read More

கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு6 லட்சம் பாட புத்தகங்கள் வந்தாச்சு…!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. .விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. , கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் 172 பள்ளிகளில் 6 முதல் 12-ம்…

Read More

எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி தேர்தல் செலவு கணக்கு தாக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்தது. வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த நிலையில் மாவட்ட அளவில் தேர்தலில் போட்டியிட்ட குறிப்பாக 10 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை நான்கு நாட்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்களின் செலவு கணக்குகள் பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 183…

Read More

காலி மது பாட்டில் வாங்க மாட்டோம்… டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் கடந்த 1.04.2023ம் தேதி முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நிர்வாகத்திற்கு பலமுறை சுட்டி காட்டியும், தீர்வு காணாமல் டாஸ்மாக் நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பிளமேடு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன் நேற்று ஊழியர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு போதிய…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… Anti terrorism squad விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை இமெயில் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் . தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என…

Read More