Bus camara: கோவையில் நடுராத்திரியில் இளம் ஜோடி பஸ்ஸில் லீலை…?!

கோவை வடவள்ளி பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இளம் ஜோடி ஒன்று ஏறியது. சுடிதார் அணிந்த கையில் வாட்டர் பாட்டில் வைத்திருந்த இளம் பெண் மற்றும் கையில் டாட்டூ போட்ட வட மாநில தோற்றத்தில் இருந்த வாலிபர் அந்த பஸ்சுக்குள் ஏறினார்கள் அவர்கள் பஸ்ஸில் இருந்த மின் விளக்கை ஆப் செய்துவிட்டு ஒவ்வொரு ஜன்னல் கதவுகளையும் மூடினார்கள். சுமார் 45 நிமிடம் அந்த பஸ்ஸுக்குள் இருவரும்…

Read More

Dvac ride: கோவையில் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கிறது. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் சில சார்பதிவாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது ஓரிரு நாளில் அதிகாரிகள் புதிய இடங்களில் பதவி ஏற்க உள்ள நிலையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ சார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை காந்திபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பத்திரம் பதிவு…

Read More

drone survey: கோவையில் ஆழமான, அபாய கல் குவாரிகள் விரைவில் மூடல்…

கோவை மாவட்டத்தில் அதிக ஆழம், அபாயமான கல் குவாரிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 151 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரிய பசுமை வரி செலுத்தப்பட்டதா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள்…

Read More

இன்ஸ்டாவில் அசிங்கமா போடுறாங்க… கோவை பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் புகார்…

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து…

Read More

covai pocso case: குற்றவாளி மீது சிறையில் தாக்குதல்

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். ‌ இவருக்கு உதவியதாக மோகன்ராஜ் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். ‌ இவர்கள் இரண்டு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிறார் பாலியல் துன்புறுத்தல் (pocso) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்ல…

Read More

கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே FL2, FL3 பார்கள் அதிகரிப்பு…

கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே கீதா ஹால் ரோட்டில் ஏகப்பட்ட லாட்ஜ், ஹோட்டல்கள் இருக்கிறது. ஒரே வீதியில் மட்டும் 12 ஹோட்டல்களில் எப்எல் உரிமம் பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என கட்டுப்பாடு விதித்து கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பள்ளி கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு கலங்களில் இருந்து இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் மதுபான கடைகள் இருந்தால் மூட வேண்டும் என உத்தரவு…

Read More

கோவையில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய காதலன் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணிற்கும் சென்னையை சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் (26) என்ற இளைஞருடன் காதல் இருந்தது. கார்த்திக் மீது மாநில அளவில் காவல் நிலையங்களில் 31 குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தெரிகிறது. காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இந்த நிலையில் இளம்பெண் கார்த்திக் உடன் பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர் மூன்று பேருடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு‌…

Read More

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பெரியார் அறிவுலகம்’ விரைவில் திறப்பு…

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 90 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள…

Read More

எஸ்பி வேலுமணி கோஷ்டி ‘ காலி’ செ. ம வேலுசாமி குரூப் லிஸ்ட் ரெடி…!

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தலைமைக் கழகத்தின் எதிர்ப்பை மீறி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி உள்கட்டமைப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமி நியமனம் செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள்…

Read More

கனமழையால் கோவை ஏர்போர்ட் காம்பவுண்ட் இடிந்தது: விமான சேவை ரத்து

கோவை விமான நிலையம் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகம் 16,400 சதுர மீட்டர் பரப்பில் இருக்கிறது, 24 செக் இன் கவுண்டர்கள், 12 குடிவரவு கவுண்டர்கள், 6 செக்யூரிட்டி பகுதி வழியாக சோதனை நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் இங்கேயிருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய வளாகம் முழுவதும் 12 அடி உயரத்திற்கு மேல் காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று…

Read More