கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற , தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வரும் அதிமுக பிரமுகர்களை களம் இருக்க தலைமை முடிவு செய்துள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலர் சீட் விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ தேர்வு பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள்….

Read More

இந்த தடவை கோவை தொகுதிகள் மிஸ் ஆக கூடாது… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

கோவை முதலிபாளையம் பகுதியில கோவை, நீலகிரி திமுக நகர ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூடடம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது மேற்கு மண்டலத்தில் உள்ள 30 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; கோவையில் கடந்த ஒரு மாதம் முன்பு நடந்த இளைஞரணி கூட்டம் மாநாடு போல் நடந்தது. இதையடுத்து தற்போது…

Read More

கோவையில் வாக்காளர்களுக்காக பதுக்கிய 173 அண்டா பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை கண்டறிய சோதனை நடத்தி வருகிறார்கள் இன்று உக்கடம் புல்லு காடு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பாத்திரங்களை பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் வீட்டில் 173 சில்வர் அண்டா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாத்திரங்களை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த…

Read More

தமிழக குடிநீர் வாரியத்தில் பல கோடி ரூபாய் திட்டப்பணி ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்…!

தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கான குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டாக போலியான நிதி மூலதனம் ( பைனான்சியல் டர்ன் ஓவர்), பணி அனுபவ கால சான்றுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருவதாக…

Read More

பெண்களை பாலியல் தொந்தரவு செய்த கோவை 4வது பட்டாலியன் கமாண்டன்ட் கைது

கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. இதில் கமாண்டன்ட் ஆக எஸ்பி அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் அங்கே பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியுள்ளார். இது தொடர்பான புகார்கள் பெறப்பட்ட நிலையில் கடந்த மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை தெற்கு அனைத்து மகளிர்…

Read More

கோவை உக்கடம் பஸ் டெர்மினல் 1 நாளை திறப்பு..!

கோவை உக்கடம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கே உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதி இடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக செல்வபுரம் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்த மீன் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டு 13 கோடி ரூபாய் செலவில் உக்கடம் முனையம் 1 என்ற பெயரில் உக்கடம் பஸ் டெர்மினல் அமைக்கும் பணி நடந்தது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் வகையில் டவுன்…

Read More

கோவை டிஜி காப் வாட்ஸ் அப் சாட் போட் அறிமுகம்.. !

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ‘கோவை டிஜி காப்’ என்ற பெயரில் புதிய வாட்ஸ்ஆப் சாட் போட் சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைத்தனர். போலீசாரை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் ஆப் சாட் போட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் 98400…

Read More

கோவையில் கஞ்சா, சிந்தடடிக் டிரக்… வீடியோ கான்பரன்சில் துணை தேர்தல் கமிஷனர் விசாரணை

சமீபத்தில் கோவை ரயில் நிலையத்தில் வரும் முதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.. (பைல் படம்) கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரூ இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த முறை தேர்தல் ஆணைய துணை கமிஷனர் தான் ஆய்வுக்கு…

Read More

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்.. கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி தனது ஆண் நண்பரும் ஒருவருடன் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இந்த நிலையில் அங்கே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி (31), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21) மதுரை மாவட்டத்தை சேர்ந்த…

Read More