கோவை டிஜி காப் வாட்ஸ் அப் சாட் போட் அறிமுகம்.. !

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ‘கோவை டிஜி காப்’ என்ற பெயரில் புதிய வாட்ஸ்ஆப் சாட் போட் சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைத்தனர். போலீசாரை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் ஆப் சாட் போட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் 98400…

Read More

கோவையில் கஞ்சா, சிந்தடடிக் டிரக்… வீடியோ கான்பரன்சில் துணை தேர்தல் கமிஷனர் விசாரணை

சமீபத்தில் கோவை ரயில் நிலையத்தில் வரும் முதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.. (பைல் படம்) கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரூ இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த முறை தேர்தல் ஆணைய துணை கமிஷனர் தான் ஆய்வுக்கு…

Read More

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்.. கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி தனது ஆண் நண்பரும் ஒருவருடன் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இந்த நிலையில் அங்கே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி (31), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21) மதுரை மாவட்டத்தை சேர்ந்த…

Read More

கோவையில் போட்டியிட கமலஹாசன் தலைமையில் ஆலோசனை…!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மற்றும் துணைத் தலைவர் மௌரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட சாத்தியம் உள்ள தொகுதிகள் குறித்து கட்சியினர் கருத்து கேட்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை கமலஹாசன் போட்டியிட்டார். இதில் சொற்ப வாக்கு…

Read More

கோவையில் கல் குவாரி டெண்டரில் முறைகேடு: எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணனிடம் புகார் மனு அளித்த அதிமுகவினர்.. பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி அதிமுக நிர்வாகி கிருஷ்ணகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்று வழங்கினர். அதில் கோவை மாவட்டம் கேரளா எல்லையில் இரண்டு கல் குவாரி களுக்கு ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட்டது. ஆனால் இதில் அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக அவரது ஆதரவு நபருக்கு மட்டும் டெண்டர் வழங்க…

Read More

கோவையில் வாலிபர் கையை கட்டி குளத்தில் வீசி கொலை..!

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் இன்று சடலம் ஒன்று மிதந்தது. அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர் . இறந்த நபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம். அவரின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் அந்த நபரை தாக்கி கைகளை கட்டி தண்ணீரில் தூக்கி வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது. உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து அந்த…

Read More

கோவையில் மாணவர் அறைகளில் ரெய்டு: கஞ்சா, மெத்தபெட்டமைன் சிக்கியது

செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதை பொருட்கள் டிஸ்ப்ளே.. கோவை மாவட்டத்தில் மதுக்கரை செட்டிபாளையம், எட்டிமடை மலுமிச்சம்பட்டி ,ஒத்தக்கால் மண்டபம், சூலூர் , நீலாம்பூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. CASO(cardon and search operation) என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் 4.5 கிலோ கஞ்சா 10 கிராம் மெத்தபெட்டமின் , 2.5 கிலோ கஞ்சா…

Read More

கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பீதியில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு..!

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு (பைல் படம்) கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இமெயில் இன்று மதியம் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும் பதறிப்போன பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்று தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் இறுதிப்பட்டியலில் 26.97 லட்சம் வாக்காளர்கள்..!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் நேற்றைய தேதி வரை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற உள்ள வாக்காளர்களின் விவரம் வெளியிடப்பட்டது.இதில் கோவை மாவட்டத்தில்மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 279465 வாக்காளர்கள், சூலூர் சட்டமன்ற தொகுதியில் 303565 வாக்காளர்கள்கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 407507 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 291537 வாக்காளர்கள், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 287519 வாக்காளர்கள், கோவை…

Read More

கோவை கேரளா எல்லையில் தேர்தல் அசம்பாவிதம் தடுக்க ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில எல்லை மாவட்ட அதிகாரிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் பாண்டியன், இடுக்கி மாவட்ட கலெக்டர் கணேசன், பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, போலீஸ் அதிகாரிகள் சுதர்சன், இளங்கோ ,அஜித்குமார் , சாபு மேத்யுஉள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த…

Read More