Coimbatore Crime: கொலை, கொள்ளை தடுக்க போலீசார் அப்பார்ட்மெண்ட் விசிட்…

கோவை நகரில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் சப்ளை, சமூக விரோத செயல்கள் அதிகமாகி விட்டது. குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. போத்தனூர் போலீசார், தங்களது எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், “பொது மக்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக சம்பவ…

Read More

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா: ரெய்டு நடத்துமா என்ஐபி…!?

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாளையார் சின்னம்பதி பாரப்பட்டி நரசிபுரம் மாங்கரை ஆனைகட்டி தோலம்பாளையம் சிறுமுகை மேட்டுப்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனங்களில் கஞ்சா சாகுபடி நடக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. மலைப்பகுதியில் கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்கே ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்ப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 30 முதல் 50 டன் எடையில் விதை நீக்கப்பட்ட உலர்ந்த தரம் பிரித்த கஞ்சா சேகரிக்கப்பட்டு வருவதாகவும்,…

Read More

தப்பு செஞ்சவங்க ஓட முடியாது ஒளிய முடியாது… கோவையில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி…

கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் இன்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆய்வு நடத்தினார். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதுஇது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது மாணவிகளிடம் இருந்து புகார் வந்தது. அந்த அடிப்படையில் இங்கே சோதனை நடத்தப்பட்டது. உணவை சாப்பிட்டு பார்த்தோம். மாணவியர் தரப்பில் பஸ் வசதி வேண்டும் என கேட்டார்கள். விடுதிக்கு வரும் வழியில் உள்ள…

Read More

கோவையில் வீட்டு வேலைக்கு வருபவர்கள் குற்றவாளிகளா என கண்டறிய உத்தரவு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு டிரைவர் வீட்டு வேலை செய்யும் நபர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலை செய்யும் நபர்களை அனுப்பிவைக்கும் (Man Power Agency & Security) நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளின்படி முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்குரிய…

Read More

கோவை உக்கடத்தில் வாலிபர்களை விரட்டி முட்டிய காங்கேயம் காளை…

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் இன்று நள்ளிரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும் பொருட்களை வீசினர். கோபமடைந்த காளை அவர்களை விரட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை மாடு முட்டி தூக்கி வீசியது. பின்னர் வேகமாக ரோட்டில் ஓடியது. இதை பார்த்து பயந்து போன அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கோவை மாநகர…

Read More

போதை ஏறி போச்சு…கோவை கலெக்டர் அலுவலகம் பெண் ரகளை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மாலை 50 வயது மதிக்கதக்க பெண் வந்திருந்தார். பேண்ட் டீ சர்ட் அணிந்து ஆண் போன்ற தோற்றத்தில் சுற்றிய அவர் திடீரென அங்கேயிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் அங்கே சென்ற போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் பீர் பாட்டில் வைத்திருந்தார். மதுவை சிறிது குடித்து விட்டு மீதம் வைத்திருந்தார். போலீசார் அவரிடம் யார்…

Read More

கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு…

தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்து 500மீட்டர் வரையுள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 851 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் அதிகளவில் மூடப்பட இருக்கிறது. காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள…

Read More

கோவையில் 4513 டன் உரம் இருப்பு…

இது குறித்து கோவை வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா உர வகை 3,176 மெட்ரிக் டன், டிஎபி உர வகை 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் உர வகை 2,933 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உர வகை 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உர வகை 4,513 மெட்ரிக் டன், தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது….

Read More

கோவையில் தென்மேற்கு பருவமழை பாதிப்பை தடுக்க ஆலோசனை…

கோவை கலெக்டர் பவன்குமார் தலைமையில் தென்மேற்கு பருவமழை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில், தென்மேற்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலூகா அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து 1077 என்ற கட்டணமில்லா…

Read More

கோவை ரயிலை கவிழ்க்க முயற்சி… ஏணி திருடர்கள் 2 பேர் கைது

திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அஹில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி கோவையை கடந்து சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில் ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தினால் ஆன ஏணி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் அந்த ரயில் ஏணி மீது ஏறியது. இதில், அந்த ஏணி துண்டு…

Read More