கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு…

கோவை மாவட்டத்தில் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. மாவட்டத்தில் 1063 வளாகங்களில் 3540 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடந்தது இந்த ஓட்டு பதிவுகளை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் ஓட்டு சாவடிகளை கண்காணித்தனர். 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. இதில் ஓட்டு சாவடிகளில் விதிமுறை மீறல் இருக்கிறதா? என 20 அலுவலர்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் தீவிரமாக நடந்த வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று நடந்தது மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடந்த இரு மாதம் முன்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள் நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது உள்ள பட்டியலில் சரியான வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தள் கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் மகளிர், யூத், மாடல், பசுமை ஓட்டுச்சாவடிகள்…!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிளில் 1,065 வளாகங்களில் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 31 ஓட்டு சாவடிகள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும் இங்கே ஓட்டு பதிவு நடக்காது, 3342 ஒட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடத்தப்படும். எஸ்ஐஆர் பணிக்கு முன் கூடுதல் ஓட்டு சாவடிகள் இருந்தது. இதை நீக்கம் செய்யாமல் பூஜ்ஜிய நிலை எனப்படும் செயல்பாடு நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் 360 ஓட்டு சாவடிகள், சூலூரில் 305, கவுண்டம்பாளையம்…

Read More

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் செய்யும்…

Read More

Modi pitches for double engine government at NDA rally in Coimbatore…

COIMBATORE Prime Minister Narendra Modi on Friday called upon voters in Tamil Nadu to support the National Democratic Alliance (NDA), asserting that a “double engine” government would ensure faster implementation of welfare schemes and development projects. Addressing a public meeting at CODISSIA grounds in Peelamedu, Mr. Modi said the people of Tamil Nadu should deliver…

Read More

டபுள் இன்ஜின் அரசு தேவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…!

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி , பாஜக வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் 23…

Read More

கோவை காந்திபுரத்தில் கரூர் குரூப் டோக்கன்…

கோவை காந்திபுரத்தில் ஒட்டுக்கு பரிசு தருவதற்காக டோக்கன் வழங்கப்படுவதாக இன்று இரவு புகார் வந்தது. தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் அங்கே சென்று விசாரித்தனர். சிலரிடம் இருந்து டோக்கன் பெறப்பட்டது. டோக்கன் வீடு வீடாக சிலர் வழங்குவதாகவும் பணம், பரிசு பொருட்கள் விரைவில் தருவதாக கூறியிருப்பதாகவும் தகவல் வெளியானது. டோக்கனில் என்ன பரிசு தருவார்கள் என தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வாக்காளர்கள் மத்தியில் பரிசு பொருட்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சில வீடுகளில் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்….

Read More

பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகை…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார். கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி தொகுதியை சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் 9 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேச உள்ளார்….

Read More

கோவையில் ‘பேலட் பேப்பர்’ அச்சடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் இந்த பேலட் பேப்பர்…

Read More

நாளை முதல் 85 வயதானவர்கள் தபால் ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் வீடுகளுக்கு சென்று தபால் ஒட்டு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே படிவம் 12டீ விண்ணப்பம் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் 7583 மூத்த வாக்காளர்கள் (85 வயது கடந்தவர்கள்), 1692 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. படிவத்தில் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. பூர்த்தி செய்த வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்கு பதிவு அலுவலர்…

Read More