பானைகளில் புதைந்த காசுகள்

வெள்ளலூரில் கி.பி. 1842ம் ஆண்டில் ஒரு விவசாய நிலத்தை தோண்டியபோது பானை பானையாக 1213 காசுகள் கிடைத்தன. இந்த காசுகள் 170 ஆண்டுகளுக்கு பின் தொல்லியல் துறைக்கு கிடைத்து. இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சியில் இந்த காசுகள் அகஸ்டஸ், திபிரியெஸ் காலத்தை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பொள்ளாச்சி வட்டாரத்தில் பட்டளை கிராமத்தில் கி.பி 1800ம் ஆண்டின் ரோமன் நாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையும் பானையில் புதையலாக கிடைத்தவை. பல்லடம் சாவடிபாளையத்தில் பெருங்கற்கால சின்னத்தில் மண் குடுவையில் முத்திரை…

Read More

காலங்களைக் கடந்த அரசு கலைக் கல்லூரி…

திண்ணை பள்ளியில் மட்டுமே கல்வி என்றிருந்த கால கட்டம் அது. 1852ம் ஆண்டில் ஆங்கில மொழி பள்ளி அமைக்கப்பட்டது. இந்த பள்ளியை நிறுவியவர் கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இ.பி.தாமஸ். ஆரம்ப காலத்தில் இது தாமஸ் பள்ளி என அழைக்கப்பட்டது. கடந்த 1861ம் ஆண்டில் இது நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது. டி.ஜி.டேவிஸ் என்பவர் நடுநிலைப்பள்ளி தலைவராக பதவி வகித்தார். 1864-65ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக அந்தஸ்து பெற்றது. 1868ம் ஆண்டில் கல்லூரியாக மாறியது.இதற்கு கோவைக்கல்லூரி என பெயர் வைக்கப்பட்டது. அப்போது,…

Read More

பட்டி, கரை, மடை ஊர்கள் உருவான வரலாறு…

கொங்கு வட்டாரத்தில் பாளையம், பள்ளி, ஊர், மடை, கரை என முடியும் கிராமங்கள் அதிகம். இந்த பெயர்கள் பஞ்சாயத்து சபையில் உருவாக்கப்பட்டதல்ல. ஆதி காலத்தில் தொழில், கலை, பண்பாடு, கலாச்சாரம் அடிப்படையில் ஊர்கள் உருவானது. பாப்பநாயக்கன்பாளையம், சீரநாயக்கன்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், துடியலூர், மருதூர், பாப்பநாயக்கன்புதூர், இருகூர், சூலூர் என இடம், பொருள், வாழ்க்கை சூழலை மையமாக வைத்து ஊர் பெயர்கள் அமைக்கப்பட்டன. பன்னிமடை, காரமடை, கள்ளிமடை, சேத்துமடை என நீர் நிலைப்பகுதியை மையமாக கொண்டு ஊர்கள் உருவாக்கப்பட்டன….

Read More

தாவளம் உருவானது எப்படி

பெருவழிகளில் வணிகர் தங்கி செல்ல தாவளம் என அழைக்கப்படும் தங்கும் சாவடி உருவாக்கப்பட்டது. பொது இடத்தில் பொது ஜனங்கள் இந்த இலவச தங்கும் கூடம் ஏற்படுத்தப்பட்டது. சாவடிகள் 5 மைல், 10 மைல் தொலைவுகளில் அமைந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் பயணம் கால்நடையாகவே அமைந்தது. பாலக்காடு கணவாய் வழியாக மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு வழியாக உருவாக்கப்பட்டன. ஆனைமடை வடபூதி நத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன்குளம் செல்லும் வகையில்…

Read More

சுடுமண் காதணிகள்…

மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இளசுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது. ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத்திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுட வைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன். மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடிவங்களை சுடுமண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம் வந்தனர். கொங்கு நாட்டு…

Read More

ஆனைமலை காட்டின் கும்கி யானைகள்…!

சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கியது உம்பற்காடு (யானைக்காடு). ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இளங்கண்ணனார் ஆட்சி காலத்தில் யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்துள்ளன. நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை செய்து, பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை வைத்து மிதிக்க செய்து நெல் மணி சேகரித்துள்ளனர். உம்பற்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன. மூங்கில், தேக்கு, வாகை என பசு மர தோட்டங்களுடன் வளம் மிக்க பகுதியாக உம்பற்காடு இருந்தது. குட்டுவன் கோதை என்ற மன்னன் காலத்தில் ஆத்து பொள்ளாச்சியில் குடம்…

Read More

சடங்குகளை உருவாக்கிய நாட்டார் சபைகள்…

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி 10ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலம் (கோவை வட்டாரம்) 3,750 சதுர கி.மீ பரப்பாக இருந்தது. இதில் வாயறைக்கா நாடு, பொங்கலூர்க்கா நாடு, பேரூர் நாடு என மூன்று முக்கிய பகுதிகள் இருந்தன. நாடு என்பது வட்டாரமாக குறிக்கப்பட்டு வந்தது. ஆலத்தூர், வெள்ளலூர், மன்னியூர், சூரலூர் திருமுருகன்பூண்டி போன்றவற்றின் பெயர்கள் நாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு ஆதாரங்களில் இது தொடர்பாக பெயர்கள் இருந்துள்ளன. ஆனால் முப்பெரும் நாடுகளின் கட்டுபாட்டுக்குள் சிறு நாடுகள்…

Read More

காயாத காஞ்சி மாநதி….

காஞ்சிமாநதி என்ற நொய்யல் ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் 70க்கும் மேற்பட்ட ஓடை நீர் மூலமாக சங்கமிக்கிறது. நொய்யல் ஆறு கி.பி.12ம் நூற்றாண்டில் இயற்கையாக காட்டாறாக உருவானதாக கூறப்படுகிறது. 183 கி.மீ தூரம் பாயும் இந்த ஆறு கொடுமுடியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசன பரப்புக்கு நீர் ஆதாரமாக இருந்த வற்றாத ஜீவநதி தான் நொய்யல். 700 ஆண்டுகளுக்கு முன் பேரூர் பகுதியில் நொய்யலின் இடையே இரண்டு கல்லணைகள் இருந்தன. இவை…

Read More

கொங்கு நாட்டை காத்த புலி குத்தி வீரர்கள்…!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வனாந்திரமாக காட்சி அளித்தது கொங்கு நாடு. சிறுத்தை, புலி கூட்டத்திற்கு இடையே உயிர் பயத்தில் மரண போராட்டத்தில் மக்கள் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். பனங்காடு, முள்காடு, புதர்காடு, மரக்காடு, பாறைக்காடு என பல்வேறு வகையான காடுகளின் தொகுப்பாக கொங்கு நாடு காணப்பட்டது. இப்போதைய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரத்தை உள்ளடக்கிய பகுதி தான் அன்றைய கொங்கு நாடு. சிறுத்தை, புலி கூட்டத்தை அடக்க இளைஞர்கள் படை உருவாக்கப்பட்டது….

Read More

கோவை கேரளாவுக்கான ராசகேசரி பெருவழி பாதை…

கோவை மாவட்டத்தில் அழிந்து போன கால சுவடுகளில் ராச கேசரி பெருவழிச்சாலையும் ஒன்று. வணிகர்கள், யாத்ரிகர்கள் பயன்படுத்திய அந்த காலத்து 7 நெம்பர் ரோடு’ தான் ராச கேசரி பெருவழி. 13ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பரகேசரி வழி வந்த மன்னர் ராசகேசரி அமைத்த ரோடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கரூர் அருகே கொடுமணல் என்ற பகுதியில் இருந்து கோழிக்கோடு வரை ராசகேசரி பாதை நீண்டுள்ளது. சுமார் 400 கி.மீ தூரத்திற்கு இந்த ரோடு…

Read More