Drone survey: பாதாளம் வரை தோண்டிய கல் குவாரிகள் விரைவில் மூடல்…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த 2 மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து…

Read More

நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டம்…

மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பினர் இன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக 40க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலைய சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர்…

Read More

கலெக்டர் அலுவலக சுவர் மீது மரம் விழுந்தது

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த புங்கன் மரம் இன்று சாய்ந்து விழுந்தது. இதில், இரு கார் சேதம் அடைந்தது. ஒரு கார் மரக்கிளைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு – அலுவலர் சலீம் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மிஷின் ரம்பம் மூலமாக மரக்கிளைகளை அகற்றி இடிபாடுகளில் இருந்து கார்களை மீட்டனர். மேலும், அந்த பகுதியில் சில கார்கள்…

Read More

வெள்ளலூர் குப்பை ஒரு ஆண்டுக்குள் காலி… அமைச்சர்கள் உறுதி

கோவை நெக்ஸ்ட் அமைப்பின் சார்பில் தொழில் துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடந்தது. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), கொடிசியா சைமா, கோவை கிளை இந்திய வர்த்தக சபை, கிராடாய், சீமா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளை சீர் அமைக்க வேண்டும். கழிவுகளை தடுக்க வேண்டும். மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும்,”…

Read More

பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் அதிநவீன எந்திரங்கள் மற்றும் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்ததும், ஊழியர்கள் குடோன் மற்றும் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில், குடோன் உள்ளே இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்திற்குள் தீ பரவி,…

Read More

கோவையில் வாலிபர் கொலை இரண்டு பேர் கைது

வேலை பறிபோன ஆத்திரத்தில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொன்ற உடுமலை, மடத்துக்குளத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (26). இவர் தனது உறவினர் கர்நாடகாவை சேர்ந்த கணேஷ் பாண்டி (36) என்பவரை சந்திக்க கோவை வந்துள்ளார். கணேஷ் பாண்டி கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே அவுட் பகுதியில் தங்கிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ரவிகுமார் வெரைட்டி ஹால் ரோடு, தலைமை தபால் நிலையம்…

Read More

கோவை மாவட்டத்தில் இனி அனைத்து புல எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பு…

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் கடந்த 2023ம் ஆண்டில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. தற்போது இந்த வழிகாட்டி மதிப்பில் (கைல்ட் லைன் வேல்யூ) திருத்தம் செய்து அறிவிக்கப்பட உள்ளது. 3 ஆண்டிற்கு பிறகு தற்போது மாநில அளவில் வழிகாட்டி மதிப்பில் புதிய மாற்றம் கொண்டுவர ஆயத்த பணிகள் நடக்கிறது. மாநில அளவில் 576 சார்-பதிவாளர் அலுவலகம் மூலமாக வருவாய் கிராமங்களில் விவசாயம், தொழிற்சாலை, வணிகம், குடியிருப்பு, புறம்போக்கு என பல்வேறு நில வகைகளுக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பு…

Read More

வியட்நாம் படகு விபத்தில் இறந்த 6 பேரின் சடலம் கோவை வந்தது

வியட்நாம் பூ குவேக் பகுதியில் உள்ள ஒரு தீவில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா , திருச்சி திருவானை கோயில் பகுதியை சேர்ந்த பாலாஜி, அன்பு நகரை சேர்ந்த அழகு ராஜன் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்து விட்டனர். இவர்கள் சடலம் விமான மூலமாக இன்று மதியம் கோவை வந்தது. கோவை…

Read More

நடிகர் பாக்கியராஜுக்கு கோவையில் நினைவஞ்சலி… நடிகர் சிவகுமார், சுந்தர்ராஜன் உருக்கமான பேச்சு…

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்என்ஆர் அரங்கத்தில் மறைந்த சினிமா நடிகர், இயக்குநர் பாக்கியராஜ் நினைவு அஞ்சலி இன்று நடந்தது. இதில் நடிகர் சிவக்குமார். இயக்குநர் சுந்தர்ராஜன், பாக்கியராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு உள்ளிட்டோர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் அண்ணாபூர்ணா குரூப் தலைவர் சீனிவாசன், முன்னாள் மேயர் பாலகிருஷ்ணன், ஆடிட்டர் கார்த்திகேயன், முன்னாள் லயன்ஸ் கிளப் இயக்குநர் ராமகிருஷ்ணமூர்த்தி, மனோகரன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர்…

Read More

கோவையில் சுமார் 50 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க திட்டம்…!

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் தொடர்பாக கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டு வரும் இந்த சர்வே மூலமாக கனிம வள கொள்ளை மற்றும் முறைகேடுகளை கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 160 கல்குவாரிகள் இருக்கிறது. இதில் 20 கல்குவாரிகளில் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சி காலத்தில் ட்ரோன் சர்வே ஆய்வு நடத்தப்பட்டது . தற்போது 140 கல்குவாரிகளில் ஆய்வு நடந்த…

Read More