பாறை, பள்ளம்… ரூ.30 கோடி மைல்கல் மேம்பாலம் பணி தாமதம்…

கோவை மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது. 3 பேக்கேஜ்களாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 13 சிறுபாலங்களுடன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது, பைபாஸ் ரோட்டின் துவக்கமான மைல்கல் சுகுணாபுரம் மஞ்சு பள்ள ஓடை மீது புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. சுமார்…

Read More

கை ஏந்தாமல் சைகை காட்டி அசத்தும் காக்கி சட்டை…!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (50). திருநங்கையான இவர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஹோம் கார்டு என்ற ஊர்காவல் படை காவலராக பணி செய்து வருகிறார். வின்சென்ட் ரோடு, ராஜ வீதி பகுதியில் இவர் பணி செய்கிறார். இவர் கூறியதாவது: நான் தங்க நகை வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். என் 14 வயதில் ஏற்பட்ட உடல் மாற்றத்தினால் பிரேம் என்ற பெயருடன் இருந்த நான் திரு நங்கையாக மாறி விட்டேன். மும்பை சென்று சில காலம்…

Read More

பழங்கால பெண்களின் அழியாத ஆபரணம் ‘சுடுமண் காதணிகள்’…!

மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இள சுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது. ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத் திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்-கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுடவைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன், மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடி வங்களை சுடு மண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம்…

Read More

168 ஆண்டு பொக்கிஷம்… கோவையில் பஞ்சு குடோன் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆனது…!

கோவையில் பிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரம் 1850ம் ஆண்டில் உச்சத்தில் இருந்தது. அந்த கால கட்டத்தில், கோவையில் பிரமாண்ட அலுவலகங்களும், குடியிருப்புகளும் உருவானது. கோவையில் பஞ்சு உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிந்த பிரிட்டீசார், அதனை சேமித்து மில்களுக்கு அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக நகரின் மையப்பகுதியில் 4,500 சதுரடி பரப்பில் 50 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை கடந்த 1858ம் ஆண்டில் கட்டினர். கான்கிரீட் வசதி இல்லாத அந்த காலத்தில் தேக்கு மரத்தை வைத்து அதன் மீது கான்கிரீட்…

Read More

அதிக வெப்ப தாக்குதல் பயிர் காக்க கோவை கலெக்டர் யோசனை…!

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக வெப்பநிலை காரணமாக மக்காசோளம், சோளம், நிலக்கடலை, எள், பயறு வகைகள் போன்ற வேளாண் பயிர்கள், மலர்கள் மற்றும் பழ பயிர்களில் மலர் உதிர்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும்…

Read More

கோவையில் ‘டிஜி காப் வாட்ஸ் அப்’ சேவை பயன்படுத்த போலீசார் விழிப்புணர்வு…!

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் போலீசாரை எளிதில் அணுகும் வகையில், ‘கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் அப் சாட்போட் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது . பொதுமக்கள் 98400 91100 என்ற எண்ணை தங்கள் செல்போனில் சேமித்து, வாட்ஸ்அப் மூலம் ஹேய் (hi) என ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையைப் பொதுமக்கள் பெறலாம். இதற்கென தனியாக ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வாட்ஸ்அப் சாட்போட்…

Read More

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் மாணவர் சேர்க்கை…

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று துவங்கியது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி…

Read More

கோவையில் அரசு அதிகாரிகள் லீவு… புகார் மனுக்களுக்கு எப்போது தீர்வு…!

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மாவட்ட அளவில் பல்வேறு துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து சென்று விட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக பணிக்கு வரவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, உள்ளூர் திட்ட குழுமம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என பல்வேறு துறைகளில் அதிகாரிகள் விடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக…

Read More

சிங்காநல்லூர் மேம்பாலம் பணிக்கு அடுத்த வாரம் டெண்டர் திறப்பு…

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி…

Read More

கோவை ஓட்டு எண்ணிக்கை ரவுண்ட்ஸ்… டிரோன் பறக்க தடை

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 1528 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு…

Read More