சைபர் கிரைம் மோசடி நிதி இழப்பில் கோவைக்கு முதலிடம்…!

இணையவழி சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் `ஹாட்ஸ்பாட்’ மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சைபர் மோசடிகளால் பொதுமக்கள் அதிகளவு பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாதந்தோறும் ‘பிரகதி’ கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் அழிந்து வரும் ஆறுகள்…!

ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள சமாதிகள்… கோவை மாவட்டத்தில் வளம் மிக்க ஆறுகள் வற்றி போய் சாக்கடை சங்கமத்தால் நாறி நாசமாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாக இடம் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 320 கி.மீ…

Read More

கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர் போலீஸ்காரர் கைது…!

கோவை பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று பஸ் சென்றது. அப்போது அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார். அப்போது, அதே பஸ்சில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்தார் அவர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லாரி…

Read More

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தபால் தந்தி அலுவலகம் கோர்ட் பள்ளிகள் பாஸ்போர்ட் அலுவலகம் ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. அரசியல் மற்றும் சினிமா தொடர்பு நபர்கள் பெயர்களை குறிப்பிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டு ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டு இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்…

Read More

1.58 லட்சம் மின் கம்பங்கள் வாங்க டெண்டர்…

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மின் மண்டலங்களில் 1.58 லட்சம் மின் கம்பங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போதும் மின் கம்பம் இல்லாததால் மின் வினியோகம் செய்யப்படாமல் இருக்கிறது. மின் கம்பங்கள் பழுதினால் இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்ந்து இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், வணிக வர்த்தக தொழில் நிறுவனத்தினர் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்…

Read More

காண்டா மிருகம் கான மயிலை காக்க வனத்துறை அமைச்சகம் திட்டம்

கோவையில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 91-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது: இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது அறிவியல் திட்டமிடல், விலங்குகளின் வாழ்விட இணைப்பை பாதுகாத்தல் மற்றும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ஆய்வுகள், சமூக ஆய்வுகள்…

Read More

பெற்ற மகனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை.. .

கோவையில் தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை அடித்துக் கொடுமைப்படுத்திக் கொலை செய்த வழக்கில், தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பெற்ற தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (38). தனியார் மருத்துவமனை ஊழியரான இவருக்கும், திவ்யா (32) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அபிஷேக்…

Read More

சிறுவாணி அணையில் விரிசல்: நீர் கசிவு தடுக்க ரூ.64 கோடி செலவிட திட்டம்…

கோவை சிறுவாணி அணை சீரமைக்க 64 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேரள அரசு தமிழக குடி நீர் வடிகால் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணையின் மேம்பாட்டு திட்டம் தொடர்பான இரு மாநில அதிகாரிகளின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. இதில் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், தமிழக குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி மற்றும் பாலக்காடு மாவட்ட நிர்வாகத்தினர் பங்கேற்றனர். இதில் சிறுவாணி அணையின் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து…

Read More

guideline value: தமிழகத்தில் விரைவில் புதிய வழிகாட்டி மதிப்பு அமலாக்க உத்தரவு…

தமிழகத்தில் கடந்த 2023 ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு (guideline value) உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநில அளவில் 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஓரிரு மாதங்களில் புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடு…

Read More

நீட் தேர்வினால் மாணவி தற்கொலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா. நீட் மறு தேர்வு காரணமாக இன்று மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் தெற்கு ஆர்டீ ஓ மாருதி பிரியா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இறந்த மாணவியின் குடும்பத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவிகளுக்கு…

Read More