9.7 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கோவை பஸ்ஸில் சிக்கியது .. !

பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பஸ்ஸில் இன்று கோவை கந்தே கவுண்டன் சாவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில் வாலிபர் ஒருவரிடம் 11 கட்டிகளில் 6,140 கிராம் எடையில் 24 கேரட் தங்கம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது எர்ணாகுளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் ரகுமான் 42 என்பவரிடம் வேலை செய்வதாகவும் அவர் கொடுத்து விட்ட தங்க கட்டிகள் இது என அவர் தெரிவித்தார். இதனை உக்கடம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரிடம்…

Read More

ரூ250 கோடியில் கோவை ரயில்வே ஸ்டேஷன் டெர்மினல்..!

கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் முதலில் போத்தனூர் தலைமை இடமாக கொண்டு 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் தற்போது 7 பிளாட்பாரங்களுடன் இயங்கி வருகிறது.  தினமும் 120க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். தென்னக ரயில்வேயில் இந்திய ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டி தரும் 2 வ து ரயில் நிலையமாக கோவை ஜங்ஷன் ரயில் நிலையம்…

Read More

தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் மூன்று மாடி கட்டிடத்தில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை மற்றும் குடோன் உள்ளது. இன்று மாலை 4மணியளவில் கடையில் தீ பிடித்தது. தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. அங்கே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்து கடையில் இருந்தவர்களும் தீ மற்றும் புகையை பார்த்து உடனடியாக வெளியே வந்தனர் . இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல…

Read More

உச்சியில் சிக்கிய ஸ்கை டைனர்.. தலைகீழாக தொங்கிய 22 பேர்..!

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 80 அடி உயரம் வரை கீழிருந்து மேலே சென்று குளிர் காற்றில் சூடான உணவு சாப்பிடும் ஸ்கை டைனர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 11 மணியளவில் இந்த ஸ்கை டைனர் இயங்கிக் கொண்டிருந்து.10 அடி, 20 அடி என படிப்படியாக மேலே சென்ற ரோலர் கோஸ்டர் 80 அடி உயர உச்சிக்கு சென்று அப்படியே ஜாம் ஆகி நின்று விட்டது. மேலும் அதிர்வில் அங்குமிங்கும் ஆடி…

Read More

ரூ 100 கோடியில் போத்தனூர் ரயில்வே பணிகள் தாமதம்

கோவை ஈரோடு மார்க்கத்தில் போத்தனூர், வடகோவை முக்கிய ரயில் நிலைய சந்திப்பாக இருக்கிறது. இதில் போத்தனூர் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக இருக்கிறது.கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடி இருப்பதால் போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. 100 கோடி ரூபாய் மதிப்பில் அமரித் பாரத் திட்டத்தில் பில் லைன்,யார்டு, டெர்மினல், பயணிகள் வசதிகள், பார்க்கிங், கழிவறை என கூடுதல் வசதிகள் செய்யப்படுகிறது. வரும் காலத்தில் கோவையை விட போத்தனூர் தான் முக்கிய…

Read More

ஓட்டு சாவடிகளுக்கு இனி புது நெம்பர்

தமிழகத்தில் 75035 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது . கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 68467 ஓட்டு சாவடிகள் இருந்தது . தற்போது கூடுதலாக 6646 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலுக்கும் தற்போது நடக்க தேர்தலுக்கும்ஓட்டு சாவடி அமைவிடம் மற்றும் ஓட்டு சாவடி வரிசை எண் மற்றும் பாகம் எண் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய ஓட்டு சாவடி வரிசை எண் மற்றும் பாகம் எண் தயாரிக்கும் பணி…

Read More

வரும் 16ம் தேதி டாஸ்மாக் கடை லீவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று மூட உத்திரவிடப்பட்டுள்ளது. மதுபான விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான…

Read More

தேர்தல் வரப்போகுது… கல்யாண மண்டபம் புக்கிங் குறையுது

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் இரண்டாம் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அன்றைய தினத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அப்போதில் இருந்து தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் . குறிப்பாக 50 ஆயிரம் ரூபாய் குறைவாக மட்டுமே பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும்….

Read More

பிரியாணி , குவாட்டர் … விலை பட்டியல் விசாரிக்குது தேர்தல் கமிஷன்

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர் இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பொருட்கள் தொடர்பான பட்டியலை சேகரித்து அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருட்களின் விலையிலும் ஏற்ற தாழ்வு இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும், அதனை தேர்தல் கமிஷன் ஆய்வு அந்த விலை பட்டியலை தேர்தல் தேதி அறிவித்த…

Read More