தமிழ் புத்தாண்டு: மருதமலையில் பக்தர்கள் குவிந்தனர்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் மலை பாதையில் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களில் மட்டும் பக்தர்கள் மலை பாதை வழியாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட…

Read More

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் பழுது: தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்…!

தமிழகத்தின் காசி என்ற பெருமையைக் கொண்டது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். பிறவா பனை இரவா புளி, எலும்பு கல்லாவது, புழுக்காத சாணம், வலது காது மேல்நோக்கி இருப்பதுபோன்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது இந்த கோவில். இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்கள் பிறவி பயன் பெறுவார்கள் என்று ஐதீகம் உண்டு.இறந்தோருக்கு சடங்கு செய்ய பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்….

Read More

கோவையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்கள் நடை அடைப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் இன்று நடை சாத்தப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் , லட்சுமி நரசிம்மர் கோயில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் ,புலியகுளம் விநாயகர் கோவில் , அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் தனியார் கோயில் சந்திர…

Read More

சந்திர கிரகணம்: மருதமலை கோயில் நடை சாத்த உத்தரவு

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 3ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரஹணம் நடக்கவுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடைதிறப்பு வரும் நான்காம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெறும். அந்த நேரத்தில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருகோயில் துணை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் கோவை…

Read More

ஈஷாவில் மகா சிவராத்திரி விழா

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா யோக மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி விழா இன்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஆதியோகி சிலை முன்பு லேசர் ஷோ மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில்…

Read More

கோவை வெள்ளிங்கிரி மலை மகா சிவராத்திரி விழா;1 லட்சம் பேர் சுவாமி தரிசனம்..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ஏழுமலை ஏறி கிரிமலை ஆண்டவர் தரிசனம் செய்தனர். குறிப்பாக காலை நேரத்தில் சூரிய உதயத்தை மலை உச்சியில் இருந்து காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு மலைக்கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் மூங்கில் குச்சி உதவியுடன் கடும் வெயிலில் மலையேறி வெகு…

Read More

வெள்ளிங்கிரி மலையில் பெண் பக்தர்கள் அதிகரிப்பு..!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை சீசன் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் பல்லாயிரம் பேர் மலையேறி வெள்ளிங்கிரி சுவாமியை தரிசனம் செய்து வந்துள்ளனர். கூட்டம் அதிகம் ஆகி வரும் நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பக்தர்களுக்கு மருத்துவ குழு மூலமாக ரத்த அழுத்தம் பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை விட இந்த முறை பெண்கள் அதிகமாக மலையேறி சாமி தரிசனம்…

Read More

முருகனுக்கு அரோகரா..!கோவை கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்

தைப்பூச விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பிரபலமான முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில், அனுவாவி முருகன் கோயில், ஆவலப்பம்பட்டி வேலாயுதசாமி கோயில், ஒண்டிப்புதூர் – பாலமுருகன் கோயில், கண்ணம்பாளையம், கப்பளங்கரை, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில், காளப்பட்டி கற்குமலை ஆண்டவர் கோயில், குமரன் குன்று கல்யாண | சுப்ரமணியசுவாமி கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில், சரவணம்பட்டி ரத்தினகிரி மருதாசல கடவுள் கோயில், செடிக்காபாளையம் தண்டாயுதபாணி கோயில், காந்திபார்க் பாலதண்டாயுதபாணி…

Read More

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற இன்று முதல் அனுமதி

தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் கிரி மலை தரிசனத்திற்காக இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் இறுதி வரை இந்த கோயிலில் மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளிலே பல ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேறினர். சித்ரா பௌர்ணமி நாளில் சுமார் மூன்று லட்சம் பேர் மலை ஏறுவார்கள் என…

Read More

மருதமலைக்கு 4 நாட்கள் கட்டுப்பாடு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லலாம் .இல்லாவிட்டால் மலை பாதை படியேறி சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More