கிருஷ்ண ஜெயந்தி விழா குட்டீஸ்கள் குதூகலம்…

கோவை பிளமேடு கொடிசியா வளாகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீஜெகன்நாதர் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு தரிசன ஆரத்தி நடைபெற்றது. பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார். ஸ்ரீராதா கிருஷ்ணர் பகவான் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அகண்ட நாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் மற்றும்…

Read More

கோவையில் 5 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகம் முழுவதும் உள்ள 52 கோயில்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பேரூர் பட்டீசுவரர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோயில் நுழைவு வாயில் பகுதியில் வைக்கும் வகையில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதியுடன்கூடிய அறை ஏற்படுத்தப்பட்டு…

Read More

ஆற்று விநாயகர் கோவில் நடை அடைப்பு…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உப கோயிலான ஆற்று விநாயகர் கோயில் உள்ளது . இத்கோவில் வருட ஏலத்தில் விடுபட்டு கணிசமான தொகை கோவிலுக்கு வருமானமாக பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 16.13 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் ஏலம் விடப்பட்டது. ஏலக்காலம் முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக அதே ஏலதாரர் மூலமாக நாள் வாடகைக்கு ஆற்று விநாயகர் திருக்கோயில் நடத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது இத்கோயிலில் அமாவாசை காலங்களில் தனியார் புரோகிதர் மூலம் ஆற்று விநாயகர் கோயில்…

Read More

மருதமலை கோவில் உண்டியல் திறப்பு…

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிரந்தர உண்டியல் இன்று திறக்கப்பட்டது. துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விமலா, ஆனைமலை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சுவாமிநாதன், பேரூர் சரக ஆய்வர் பவானி, கோவில் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியலில் தங்கம் 50.05 கிராம் வெள்ளி 2 கிலோ 40 கிராமும் பித்தளை 35 கிலோ 600 கிராமும்…

Read More

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிப்பு தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். தவிர, பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இந்து அமைப்பினர் மூலம் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில்,…

Read More

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்…

கோவை உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரை தேரோட்டம் நடந்தது. தேவாரப் பாடல்களுடன் தேரோட்டம் இசை வாத்தியங்கள் முழங்க நடந்தது. கோட்டை வீதி வழியாக என் எச்ரோடு மற்றும் பெரிய கடை வீதி வழியாக தேர் வலம் வந்து கோயிலை அடைந்தது. தேரோட்டம் காண பல ஆயிரம் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டிருந்தது.

Read More

தமிழ் புத்தாண்டு: மருதமலையில் பக்தர்கள் குவிந்தனர்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் மலை பாதையில் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களில் மட்டும் பக்தர்கள் மலை பாதை வழியாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட…

Read More

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் பழுது: தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்…!

தமிழகத்தின் காசி என்ற பெருமையைக் கொண்டது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். பிறவா பனை இரவா புளி, எலும்பு கல்லாவது, புழுக்காத சாணம், வலது காது மேல்நோக்கி இருப்பதுபோன்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது இந்த கோவில். இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்கள் பிறவி பயன் பெறுவார்கள் என்று ஐதீகம் உண்டு.இறந்தோருக்கு சடங்கு செய்ய பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்….

Read More

கோவையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்கள் நடை அடைப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் இன்று நடை சாத்தப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் , லட்சுமி நரசிம்மர் கோயில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் ,புலியகுளம் விநாயகர் கோவில் , அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் தனியார் கோயில் சந்திர…

Read More

சந்திர கிரகணம்: மருதமலை கோயில் நடை சாத்த உத்தரவு

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 3ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரஹணம் நடக்கவுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடைதிறப்பு வரும் நான்காம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெறும். அந்த நேரத்தில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருகோயில் துணை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் கோவை…

Read More