கோவை மேற்குப் பைபாஸ் ரோட்டில் ரூ 2.40 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்..

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் கோவை மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. அடுத்த வாரம் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அறிவொளி நகர் பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நேற்று சரக்கு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ மோதியது . இதில் 22 வயதான கல்லூரி மாணவி உடல் நசுங்கி இறந்து விட்டார். மேலும் நான்கு பேர்…

Read More

விரைவில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு; கோவை தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் சிஇஓ அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை..!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்பாடுகளை முழு அளவில் செய்து முடித்திருக்க வேண்டும். ஊழியர்கள் பட்டியலை தயார் செய்து இறுதி செய்ய வேண்டும். பட்டியல் மிகச் சரியாக இருக்க வேண்டும். யாருக்கும் தேவையின்றி பணி சலுகை வழங்கக் கூடாது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்‌….

Read More

கோவை ரயில் பாதையில் ஏ ஐ கேமரா; ஐநா குழு ஆய்வு

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், எட்டிமடை வாளையார் வழியாக இயக்கப்படும் ரயில்கள், வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக மதுக்கரை எட்டிமடை பகுதியில் ஏ பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஏ ரயில் பாதை 29 கி.மீ தூரமும், பி ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன. இதனால் ரயில்…

Read More

இனி விசில் போடு விஜய் கட்சிக்கு வந்தாச்சு சின்னம்..

தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கி தந்துள்ளது. இது அவரது கட்சியினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் வரவேற்பை கொடுத்துள்ளது. ஏற்கனவே பிகில் படத்தில் அவர் கோச் ஆக நடித்திருப்பார். அதில் அவர் விசில் ஊதுவது ஸ்டைலாக இருக்கும். அதேபோல் விஜய் படத்தின் விசில் போடு என்ற பாடல் செம ஹிட் ஆனது. இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப சின்னம் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆட்டோ கிரிக்கெட் மட்டை சின்னம் ஆப்ஷனில் இருந்தது. ஆனால்…

Read More

துணை ஜனாதிபதி கோவை வருகை டிரோன் பறக்க தடை

இந்திய துணை ஜனாதிபதி சி ப ராதாகிருஷ்ணன், கோவை வரவுள்ளார். இதைத்தொடர்ந்து மாநகர எல்லைக்குட்பட்ட ஏற்கனவே உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் பீளமேடு, கே.எம்.சி.எச்., சின்னியம்பாளையம், சிங்காநல்லூர், SIHS காலனி, இருகூர், ஏ.ஜி.புதூர், கொடிசியா வணிக வளாகம், சேரன்மாநகர், சிட்ரா,நேருநகர், காளப்பட்டி, ஹோப்ஸ், நீலாம்பூர், பந்தயசாலை மற்றும் நவ இந்தியா ஆகிய பகுதிகளுடன் அதன் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் 14.01.2026 அன்று காலை 8 மணி முதல் 15.01.2026 தேதி…

Read More

ரேஸ் கோர்ஸ் நியூ இயர் பார்ட்டிக்கு கட்டுப்பாடு

கோவை ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா மற்றும் மீடியா டவர் பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதேபோல் ஆர் எஸ் புரம் ஸ்மார்ட் சிட்டி கிளாக் டவர் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் தினமும் அதிகமாக உள்ளது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூட்டமாக குவிந்து பார்ட்டி கொண்டாட உள்ளனர். குறிப்பாக டான்ஸ் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்க உள்ளது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு…

Read More

துப்பாக்கியால் சுடப்பட்ட 3 கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக்கில் 10 வீடுகளிலும் கடந்த மாதம் நகை பணம் திருடப்பட்டது. இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பான தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்….

Read More

அமெரிக்க மாணவியை மனைவியாக்கிய கோவை வாலிபர்…

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராமன் நம்பீசன், உமா ஆகியோர் கோவை குனியமுத்தூரில் வசிக்கின்றனர். இவர்கள் மகன் வாசு தேவன் (30). இவர் அமெரிக்காவில் விண்வெளி மையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்த சைமன் கசாஸ், கிறிஸ்டின் கசாஸ் ஆகியோரின் மகளான கட்டட கலை படித்து வரும் மாணவியான கரோலின் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலானது. இரு தரப்பினரும் தங்களது காதல் விசயத்தை பெற்றோரிடம் கூறினர். இரு தரப்பு…

Read More

மருதமலையில் குட்டி கருஞ்சிறுத்தை மீட்பு..

கோவை மருதமலை தொழு நோயாளிகள் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டது. தாயைப் பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த இந்த குட்டி சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு கூண்டில் அடைத்துள்ளனர். தாய் சிறுத்தை எங்கே இருக்கிறது என வனத்துறை என தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் மருதமலை வனப்பகுதியில் காணப்பட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த சிறுத்தை சுற்றிக் கொண்டிருந்தது. இதனுடன் இருந்த இந்த குட்டி சிறுத்தை வழி மாறி வந்திருக்கலாம் என தெரிகிறது….

Read More