பனிப்புயலால் கோவை வெள்ளிங்கிரி மலை ஏற தடை…!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் வெள்ளிங்கிரி மலை அமைந்துள்ளது. 7 மலை ஏறி கிரி மலை தரிசனம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. வெள்ளிங்கிரி மலை மற்றும்…

Read More

கோவையில் நினைவுகளை சுமக்கும் மரங்கள்…!

கோவை நேரு ஸ்டேடியம் அருகே கோவை மாநகராட்சி மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்கா முட்புதர் காடாக இருந்தது. அப்போது நேரு ஸ்டேடியம், வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம், பஸ் ஸ்டாண்ட் கிடையாது. பனை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இந்த பகுதிக்கு அந்த காலத்தில் ‘பனங்காட்டுபுதூர்’ என்ற பெயர் இருந்தது. இந்த காட்டில் சில நிழல் தரும் மரங்கள் இருந்தன. வழி போக்கர் சிலர் இங்கே தங்கி ஒய்வெடுத்தார்கள்,…

Read More

கோவையில் கொட்டியது மழை கட்டானது மின்சாரம்…

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்று இரவு காற்றுடன் மழை பெய்தது. தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆலாந்துறை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. வறட்சியால் தவித்து வந்த விவசாயிகள் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மலையை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சிறுவாணி அணை மற்றும்…

Read More

பாறை, பள்ளம்… ரூ.30 கோடி மைல்கல் மேம்பாலம் பணி தாமதம்…

கோவை மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது. 3 பேக்கேஜ்களாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 13 சிறுபாலங்களுடன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது, பைபாஸ் ரோட்டின் துவக்கமான மைல்கல் சுகுணாபுரம் மஞ்சு பள்ள ஓடை மீது புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. சுமார்…

Read More

கை ஏந்தாமல் சைகை காட்டி அசத்தும் காக்கி சட்டை…!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (50). திருநங்கையான இவர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஹோம் கார்டு என்ற ஊர்காவல் படை காவலராக பணி செய்து வருகிறார். வின்சென்ட் ரோடு, ராஜ வீதி பகுதியில் இவர் பணி செய்கிறார். இவர் கூறியதாவது: நான் தங்க நகை வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். என் 14 வயதில் ஏற்பட்ட உடல் மாற்றத்தினால் பிரேம் என்ற பெயருடன் இருந்த நான் திரு நங்கையாக மாறி விட்டேன். மும்பை சென்று சில காலம்…

Read More

பழங்கால பெண்களின் அழியாத ஆபரணம் ‘சுடுமண் காதணிகள்’…!

மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இள சுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது. ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத் திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்-கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுடவைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன், மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடி வங்களை சுடு மண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம்…

Read More

168 ஆண்டு பொக்கிஷம்… கோவையில் பஞ்சு குடோன் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆனது…!

கோவையில் பிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரம் 1850ம் ஆண்டில் உச்சத்தில் இருந்தது. அந்த கால கட்டத்தில், கோவையில் பிரமாண்ட அலுவலகங்களும், குடியிருப்புகளும் உருவானது. கோவையில் பஞ்சு உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிந்த பிரிட்டீசார், அதனை சேமித்து மில்களுக்கு அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக நகரின் மையப்பகுதியில் 4,500 சதுரடி பரப்பில் 50 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை கடந்த 1858ம் ஆண்டில் கட்டினர். கான்கிரீட் வசதி இல்லாத அந்த காலத்தில் தேக்கு மரத்தை வைத்து அதன் மீது கான்கிரீட்…

Read More

அதிக வெப்ப தாக்குதல் பயிர் காக்க கோவை கலெக்டர் யோசனை…!

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக வெப்பநிலை காரணமாக மக்காசோளம், சோளம், நிலக்கடலை, எள், பயறு வகைகள் போன்ற வேளாண் பயிர்கள், மலர்கள் மற்றும் பழ பயிர்களில் மலர் உதிர்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும்…

Read More

கோவையில் ‘டிஜி காப் வாட்ஸ் அப்’ சேவை பயன்படுத்த போலீசார் விழிப்புணர்வு…!

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் போலீசாரை எளிதில் அணுகும் வகையில், ‘கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் அப் சாட்போட் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது . பொதுமக்கள் 98400 91100 என்ற எண்ணை தங்கள் செல்போனில் சேமித்து, வாட்ஸ்அப் மூலம் ஹேய் (hi) என ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையைப் பொதுமக்கள் பெறலாம். இதற்கென தனியாக ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வாட்ஸ்அப் சாட்போட்…

Read More

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் மாணவர் சேர்க்கை…

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று துவங்கியது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி…

Read More