‘ஓட்டுக்கு பணம்’ எதுக்கு கவுண்டிங் … கோவை கலெக்டர் அலுவலகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மறுமலர்ச்சி மக்களை இயக்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் முகத்தில் இன்று கருப்பு துணி கட்டி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பணநாயக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு கேலி கூத்து என்பதை வலியுறுத்தும் வகையில் கண் காது வாய் என மூன்று புலன்களையும் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்துகிறோம் என ஈஸ்வரன் தெரிவித்தார். தொடர்ந்து ஈஸ்வரன் கூறியதாவது: கோவை…

Read More

கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

கோவை ரயில்கள் மூலமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை ரயில்வே போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர் . நேற்று ரயில்வே பிளாட்பாரம் பகுதியில் நடந்த சோதனையில் 350 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறிப்பாக பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போதை பாக்குகள்கடத்தி வந்த நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றார்கள். வட…

Read More

கோவையில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ராம்ஸ் மெடிக்கல் என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுவதாகவும் இந்த மருத்துவமனையில் விதிமுறை மீறி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் புகார் வந்தது . இதைத்தொடர்ந்து சூலூர் அரசு மருத்துவமனையில் மூத்த டாக்டர் ராஜேஷ் என்பவர் அங்கே சென்று ஆய்வு செய்தார். கோவை மாவட்ட சுகாதார பணியில் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் மருத்துவமனையை நடத்தி வரும் ராமநாதன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என தெரிய வந்திருக்கிறது. இவர்…

Read More

கோவையில் தற்கொலை செய்வதாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவி மாயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கருகடம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 45). இவரது மகள் தேவிகா (23). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆனஸ்தீசியா டெக்னாலஜி படித்து வருகிறார். கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இவர் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார் . இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது தந்தைக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் நீங்கள் தாயை…

Read More

கோவை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை…!

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதமாக வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதுவும் சமீப நாட்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி வெயில் வெளுத்து வாங்கியது. பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக தென்மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்தது. மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை பொள்ளாச்சி வால்பாறை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில்…

Read More

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல க்யூ ஆர் கோடு அடையாள அட்டை…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் நான்காம் தேதி நடக்க உள்ளது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில் எண்ணிக்கை நடத்த உள்ள அலுவலர்கள் அதிகாரிகள் போலீசார் மற்றும் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் என 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்ஒவ்வொரு தொகுதிக்கும் 14 முதல் 20 டேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு…

Read More

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்…

கோவை உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரை தேரோட்டம் நடந்தது. தேவாரப் பாடல்களுடன் தேரோட்டம் இசை வாத்தியங்கள் முழங்க நடந்தது. கோட்டை வீதி வழியாக என் எச்ரோடு மற்றும் பெரிய கடை வீதி வழியாக தேர் வலம் வந்து கோயிலை அடைந்தது. தேரோட்டம் காண பல ஆயிரம் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டிருந்தது.

Read More

கோவையில் வியாபாரி மாணவரிடம் 49 லட்ச ரூபாய் மோசடி…!

கோவை ராமநாதபுரம் அருகே உள்ள ஸ்ரீபதி நகர் முதலாவது தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் ( 53). இவரது மகன் மித்தேஸ்வரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு செட்டிபாளையம் மெயின் ரோடு கோவில் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ( 33) என்பவர் அறிமுகம் ஏற்பட்டது நன்றக பழகி உள்ளனர்ப. அப்போது செல்வகுமார் சீனிவாசனிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் எனக்கு பழக்கம். நான் அவர்களிடம்…

Read More

டிரான்ஸ்பார்மர் டெண்டர் முறைகேடு: செந்தில் பாலாஜி பேட்டி…!

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது : கடந்த 2021 ம் ஆண்டு முதல் தமிழக மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு மின்மாற்றி கொள்முதன் செய்யப்பட்டத்தில், தவறுகள் நடந்திருக்கின்றன என ஒரு அமைப்பு புகார் தெரிவித்து. மின்சார வாரியத்தைப் பொருத்தவரைக்கும், மின்மாற்றிகள் கொள்முதல் என்பது 1987 ம் ஆண்டு தொடங்கி அன்றைய நடைமுறைகள் என்ன பின்பற்றப்பட்டதோ. அதே நடைமுன்றதான் இன்று வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு டெண்டர் அறிவிக்கும்போது 20 பேர்,…

Read More

கோவை ஓட்டு எண்ணிக்கை ரவுண்ட்ஸ்… டிரோன் பறக்க தடை

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 1528 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு…

Read More