கோவையில் போக்குவரத்து விதி மீறல்: 25 கோடி ரூபாய் அபராதம் நிலுவை…!

கோவை மாநகர போலீசார், மாநகரில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலை வசதி மற்றும் வாகன போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் எளிதான பயணத்திற்காகவும் பல்வேறு போக்குவரத்துச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் மேலும், வாகன பெருக்கத்தை கணக்கெடுத்து பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் எளிதாகவும். காலதாமதமின்றியும் தாங்கள் செல்ல…

Read More

நீரின்றி காய்ந்து கிடக்கும் கோவை குளங்கள்…

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை மழை சராசரியை விட குறைவாக பெய்தது. கோடை மழையின் சராசரி அளவு 152மி.மீ என்ற நிலையில், நடப்பாண்டில் கோடை மழை 132 மி.மீ பதிவானது. இது கடந்த ஆண்டுகளில் பதிவான கோடை மழையை விட மிக குறைவாகும். மேலும், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழையின் சராசரி மழையான 210மி.மீ மழையில் 178 மி.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

Read More

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் போராட்டம்

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளும், சந்தையில் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக வியாபாரிகளும் கூறி தொடர் பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை திருச்சி சாலை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோவையின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், உழவர் சந்தை…

Read More

நடுரோட்டில் ஆபத்தான மின்கம்பங்கள்

கோவை சுங்கம் பெரியார் நகர் பகுதியில் நடுரோட்டில் மின் துன்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் சில மின்கம்பங்கள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழும் நிலைமையில் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மின்வாரியத்தினர் அங்கே மின் கம்பங்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்தனர். ஆனால் இந்த பணியை அவர்கள் நிறைவாக செய்யாமல் அறைகுறையாக பெயரளவுக்கு செய்துள்ளனர். மின்கம்பங்களை மிகவும் உறுதியாக செய்யாமல் தரைதளத்தில் மேலோட்டமாக கான்கிரீட் தளம்…

Read More

கோவையில் சாதனையாளர்கள் அறிவிப்பு பலகைகள் சாய்ந்தது

கோவை ஆர்எஸ் புரம் டி பி ரோடு பகுதியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை சீரமைப்பு பணிகள் செய்தது.கோவை நகர் பகுதியில் குறிப்பாக ஆர் எஸ் புரம் பகுதியின் வளர்ச்சிக்காக செயல்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கோவையின் பல்வேறு சேவைகளை செய்த சாதனையாளர்கள் தொடர்பான போட்டோக்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான தகர அறிவிப்பு பலகைகள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழுந்து கிடக்கிறது.இவற்றை…

Read More

கோவையில் சைகையில் கொலை மிரட்டல்: இரண்டு பேருக்கு ஜாமீன் ரத்து

கோவை மகிளா கோர்ட்டில் கிணத்துக்கடவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மாரி செல்வம் (36), அவரது அண்ணன் ராம்குமார் (48) ஆகியோர் குற்றவாளிகளாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் சாட்சிகளாக ஆஜரான புகார்தாரரான அரசம்பாளையம் ஸ்ரீதேவி மற்றும் கண்ணால் பார்த்த சாட்சி கவுசிக் ஆகியோரை நீதிமன்றத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் கொலை மிரட்டல்…

Read More

நேரு ஸ்டேடியம் வ உசி பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை

கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் பகுதியில் சிலர் வாகனங்களை நிறுத்துவதாகவும். சிலர் வாகனத்தை பாதையில் வைத்து போட்டோ, வீடியோ எடுப்பதாலும் வாக்கிங் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிலர் வியாபார கடைகளை பொது இடம், ரோடு, வாக்கிங் பாதையில் வைத்துள்ளனர். இதனால் வாக்கிங் செல்வோருக்கு இடையூறு இருப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு போலீசார், மாநகராட்சி நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். இடையூறாக இருந்த சில கடைகள், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது….

Read More

கோவையில் குப்பையாக குவிந்து கிடக்குது வீல் சேர்கள்…

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடோனில் மாற்று திறனாளிகளுக்கான வீல் சேர்கள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை தூக்கி வீசி குப்பை போல் குவித்திருப்பதாக தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மாற்று திறனாளிகள் கையால் தள்ளியபடி செல்லும் வகையான வீல்கள் கொண்ட சேர் வழங்க கோரிக்கை மனு வழங்கி வந்தனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீல் சேர் கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால் ஒதுக்கீடு படி உரியவர்களுக்கு வழங்காமல் 200க்கும் மேற்பட்ட வீல் சேர்களை குப்பை போல்…

Read More

கோவையில் துணிப்பை மிஷின்கள் மாயம்

கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் தடை செயப்பட்ட பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறையவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் வந்தது. இந்த நிலையில் மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் தனியார் நிறுவனம் மூலமாக மஞ்சள் பை வழங்கும் மெசின்களை வைத்தும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டனர். மக்கள்…

Read More

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை காலம் நீட்டிப்பு…

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு கடந்த மே 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது, மேலும், முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. தற்போது, வரை இளநிலை படிப்புகளில் 73.37 சதவீதம் மற்றும் முதுநிலையில் 47.25 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இந்நிலையில், அரசு கல்லூரிகளில் இளநிலையில் 31,678 பேரும், முதுநிலையில் 12,759 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை…

Read More