கோவையில் போக்குவரத்து விதி மீறல்: 25 கோடி ரூபாய் அபராதம் நிலுவை…!
கோவை மாநகர போலீசார், மாநகரில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலை வசதி மற்றும் வாகன போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் எளிதான பயணத்திற்காகவும் பல்வேறு போக்குவரத்துச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் மேலும், வாகன பெருக்கத்தை கணக்கெடுத்து பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் எளிதாகவும். காலதாமதமின்றியும் தாங்கள் செல்ல…
