காட்டு பன்றியா சாக்கடை பன்றியா… வனத்துறையினர் குழப்பம்

கோவை மாவட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள், உண்மையில் காட்டுப்பன்றிகளா அல்லது ஊருக்குள் சுற்றும் சாக்கடை பன்றிகளா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை தொடர்ந்து, அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை வனக்கோட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சுமார்…

Read More

நிலுவை வாட் வரி நோட்டீஸ் ; தொழில் துறையினர் அதிர்ச்சி

நிலுவை வாட் வரி மற்றும் ஆவணங்கள் கேட்டு, குறுந்தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதால் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வணிகவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் நிலுவை தொகையை செலுத்தாதது மற்றும் வரி கணக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவை வாட் வரியுடன் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்…

Read More

கோவையில் யூரியா கடத்தலில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது…

கோவையில் இருந்து கேரளத்திற்கு 25 டன் மானிய விலை யூரியா கடத்தல் வழக்கில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முக்கிய குற்றவாளியை கேரளாவில் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். மதுக்கரை ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி சந்திப்பு அருகே. கடந்த மாதம் 28ம் தேதி காலை வேளாண்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், லாரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘பாரத் யூரியா 556 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது….

Read More

பேச மறுத்து சைகை கட்டிய அமைச்சர் ஆனந்த்…

தமிழக அமைச்சர் ஆனந்த் இன்று சென்னையிலிருந்து கோவை வந்தார். கோவை சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமாரின் மகன் திருமணத்திற்காக அமைச்சர் ஆனந்த் விமானம் மூலம் கோவை வந்தார் கோவை விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த பூங்கொத்துக்களையும் மிகவும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்ட ஆனந்த், ஒவ்வொரு தொண்டருக்கும் கை கொடுத்தபடியே வந்தார். இடையே, தவெக தொண்டர்கள்,”பொதுச்செயலாளர் வாழ்க” என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது வாய் மீது விரல் வைத்து காண்பித்து,…

Read More

கோவையில் drink and driving சோதனை தீவிரம்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனங்கள் ஒட்டுவோர் மற்றும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை 7 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது, சந்தேக நபர்களை கண்டறிதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன் தங்கதுரை மகேஸ்வரன் தலைமையில் கடந்த ஆக., 24ம்தேதி (திங்கள்) காலை 5…

Read More

கோவையில் 434 பேருக்கு பிடி வாரண்ட்…

கோவை மாநகரில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக உள்ள 434 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாட்களில் 26 பேரை கைது செய்துள்ளனர். கோவை மாநகர போலீசார் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கமிஷனர் கண்ணன், தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டது…

Read More

கோவையில் பதுக்கிய 205 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

கோவை சரவணம்பட்டி 4வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு சட்டவிரோதமாக குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு யாரும் இல்லாததால் போலீசார் வீட்டில் இருந்த 1,530 பாக்கெட்டுகள் கொண்ட 205 கிலோ குட்கா மற்றும் ரூ.79,300ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில், பார்த்திபன் என்பவர் அந்த வீட்டில் வசித்து…

Read More

கோவை மாநகரில் போலீஸ் ஐஸ் திட்டம்…!

கோவை மாநகரில் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் போலீஸ் ஐஸ் என்னும் குற்றத்தடுப்பு வலையமைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இத்திட்டம் தனியார் காவலாளிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும் நேரடியாக கண்காணிப்பில் இருக்க இயலாத நிலையில், தனியார் காவலாளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், நகை கடைகள், தொழிற்சாலைகள், குடோன்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், மனைகள், கல்வி நிறுவனங்கள், கட்டுமான பணி நடக்கும் பகுதிகள்…

Read More

தேசிய கூடை பந்து போட்டி: தென்மேற்கு ரயில்வே அணி சாம்பியன்…

கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60ம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து, முதலாம் ஆண்டு மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் 5 நாட்கள் நடந்தது. ஆண்கள் பிரிவில் 4 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடந்தது. செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, வஹப்ளி தென்மேற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் தென்மேற்கு ரயில்வே அணி 65 54 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது….

Read More

2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவார்களா…?!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தவெக அரசு மகளிருக்கு உரிமை தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பிரதானமாக அறிவித்தது. மகளிர் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு உரிமை தொகையாக 2500 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாரந்தோறும் உரிமை தொகை கேட்டு 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் விண்ணப்ப மனு கொடுத்து வருகின்றனர்….

Read More