கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு ‘கலர் கோடிங்’

கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஒரே பள்ளி கூட வளாகத்தில் ஐந்து முதல் எட்டு வாக்குச்சாவடிகள் அமைந்திருப்பதாக தெரிகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட வேண்டும் என தெரியாமல் குழப்பம் அடையும் நிலைமை இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஒரே வளாகத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளை அடையாளம் காணும் முறையில் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. அந்தப் பகுதியில் வாக்குச்சாவடிகளுக்கான வரிசை எண் அமைத்து…

Read More

வால்பாறை சுற்றுலா வேன் கவிழ்ந்து 9 பேர் சாவு

கேரள மாநிலம் பெருந்தல் மன்னா பகுதியை சேர்ந்த 16 பேர் இன்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். பல்வேறு பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் மாலை 5:15 மணிக்கு வால்பாறையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி மலைப்பகுதி ரோட்டில் இறங்கிக் கொண்டிருந்தனர். டெம்போ ட்ராவலர் வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து உருண்டது. சுமார் 800 அடி தூரம் உருண்ட படி சென்ற வேன் 11வது…

Read More

கோவை திமுக கோட்டை… உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு…!

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் இங்கே வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இங்கே பார்க்கும் போது நீங்கள் ஏற்கனவே உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்திருப்பது தெரிகிறது. போன தடவை நான் இங்கே வந்தேன் பிரச்சாரம் செய்தேன். ஆனால் நீங்கள் வெற்றி வாய்ப்பு தரவில்லை. ஆனால் இந்த முறை வெற்றி வாய்ப்பு தர வேண்டும். ஒட்டு…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்களில் ‘கேண்டிடேட் செட்டிங்’ பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பேலட் பேப்பர் வந்து வந்துவிட்டது….

Read More

கோவையில் 80 லட்ச ரூபாய் மோசடி: இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை…!

ஈரோட்டை சேர்ந்தவர்ஸதர்மலிங்கம் (45). திருப்பூரை சேர்ந்தவர் கணேசன் (50). இவர்கள் இருவரும் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ் மற்றும் வெற்றி முருகன் சிட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கினர். இவர்களிடம் கோவையை சேர்ந்த முதலீட்டாளர்கள் உட்பட 130 பேரிடம் 80 .57 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகை: போக்குவரத்து மாற்றம்

கோவைக்கு வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவுள்ளனர். அன்றைய தினம் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரக்கில் மாற்றம் செய்யப்படும். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஆவணங்கள் பொருட்கள் குவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 3563 வாக்கு சாவடிகளில் வரும் 23ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க உள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட வகையான தேர்தல் ஆவணங்கள் , ரகசிய பேப்பர் ,சீல், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து மூன்று லாரிகளில் 34 வகையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் வந்து…

Read More

லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் கைது…!

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் அருண்பிரசாத் ( 38). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீடு மற்றும் வணிக வளாக கட்டடம் கட்டி உள்ளார். அதற்கு வரி செலுத்துவதற்காக கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வரும் தர்மராஜ் (52) என்பவரை அணுகினார். வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு மாநகராட்சியில் என்ன விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வரியை செலுத்தினார். தொடர்ந்து வணிக வளாகத்துக்கு ஒரு வரிபுத்தகமும், வீட்டுக்கு மற்றொரு…

Read More

கொரோனா, அரக்கன், அமாவாசை செந்தில் பாலாஜி… கோவையில் வசைபாடிய எடப்பாடி..

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார். சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து விகேகே . மேனன் சாலை வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியது ; கொரோனா வைரஸ் நோயை விட கடுமையான ஒன்று கரூரில் இருந்து வந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரவியியது. கொரோனாவுக்கு கூட மருந்து இருக்கு. இங்கே வந்திருக்கும் வைரஸுக்கு மருந்து இல்லை, உங்கள் வாழ்க்கையை முடித்து கூட்டி விடுவார்…

Read More

கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 18,753 தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு போட விண்ணப்ப படிவம் வழங்கி வாங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய தபால் ஓட்டு சீட்டுகளை பூர்த்தி செய்து இன்று நடந்த பயிற்சி வகுப்பில் ஒட்டு சாவடி…

Read More