கோவை மாநகர போலீசில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம்…
கோவை மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு வெளிப்படையான, நட்பான, விரைவான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய காவல் சேவையை வழங்கும் நோக்கில் குடிமக்கள் சேவை உரிமை ஆவணம் 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வருகின்ற 01.09.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, புகார் மனு பெறுதல் மற்றும் ஒப்புகை உடனடியாக வழங்கப்படும். புலனாகக்கூடிய குற்றத் தகவல்களுக்கு சட்டப்படி தாமதமின்றி FIR பதிவு செய்யப்படும். சாதாரண மனுவிற்கு விசாரணை அலுவலர் 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்படுவார். எளிய மனு விசாரணைக்கு 14 நாட்களும்,…
