ஜனநாயகன் திரைப்படத்தை கோவையில் சேனலில் ஒளிபரப்பியவர் கைது…!

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (44 ). இவர் உள்ளூரில் ராசி பிரைம் மூவி என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த 11ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தார் .இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். மத்திய தணிக்கை துறை ஆய்வில் ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை…

Read More

செந்தில் பாலாஜி பட்டி பிளான்… அம்மன் அர்ஜுனன் புகார்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் கோவை தெற்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இன்று மாலை புகார் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது நான் 50 ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்து விட்டேன். பிழைப்பு தேடி கோவை வந்தேன். எனக்கும் கோவை மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு அன்பு உண்டு. ஆனால் செந்தில் பாலாஜி அப்படியல்ல. தேர்தலுக்காக ஓட்டுக்காக கோவை வந்திருக்கிறார். அவர் தப்பு கரூரில் வேகாது. எனவே அவர் கோவை வந்து…

Read More

அமைதியாக தேர்தல் நடத்த கொடி அணி வகுப்பு…

கோவை மதுக்கரை மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் கோவை மாவட்ட போலீசார் வரும் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். இதில் கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் 462 போலீசார் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் அமைதியாக மக்கள் எந்தவித அச்சுறுத்தல் மிரட்டல் இன்றி தைரியமாக ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பான முறையில் ஓட்டு போடும் வகையில் போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது….

Read More

கோவை காந்திபுரத்தில் கரூர் குரூப் டோக்கன்…

கோவை காந்திபுரத்தில் ஒட்டுக்கு பரிசு தருவதற்காக டோக்கன் வழங்கப்படுவதாக இன்று இரவு புகார் வந்தது. தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் அங்கே சென்று விசாரித்தனர். சிலரிடம் இருந்து டோக்கன் பெறப்பட்டது. டோக்கன் வீடு வீடாக சிலர் வழங்குவதாகவும் பணம், பரிசு பொருட்கள் விரைவில் தருவதாக கூறியிருப்பதாகவும் தகவல் வெளியானது. டோக்கனில் என்ன பரிசு தருவார்கள் என தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வாக்காளர்கள் மத்தியில் பரிசு பொருட்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சில வீடுகளில் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்….

Read More

திமுகவிற்கு வெளிப்படையாக தபால் ஓட்டு: கோவை தெற்கு தொகுதியில் விதிமுறை மீறல்…!?

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம். இதற்கான படிவம் பூர்த்தி செய்தவர்களுக்கு வீடு வீடாக சென்று தபால் ஓட்டு வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 180 குழுக்கள் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் கொடுத்தவர்களின் வீடு தேடி சென்று தபால் ஓட்டு சீட்டுக்களை பெற்றனர். ஒட்டு போட்ட பின்னர் அந்த…

Read More

பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகை…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார். கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி தொகுதியை சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் 9 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேச உள்ளார்….

Read More

கோவை டாஸ்மாக் பாரில் ஊழியர் அடித்து கொலை: 2 பேர் கைது…!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60). இவர் கோவை வெரட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று மதியம் அவர் கடையில் பணியில் இருந்தார் . அப்போது கோவை இடையர் வீதி பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி பிரபு (28) மற்றும் தெலுங்கு வீதியை சேர்ந்த மனோஜ் (27) ஆகியோர் மது குடிக்க வந்தனர். நெருங்கிய நண்பர்கள் ஆன இவர்கள் அடிக்கடி இங்கே மது குடப்பதாக…

Read More

அண்ணாமலை பீஸ் போன பல்பு; செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று உக்கடம் கெம்பட்டி காலனி, கோழிக்கடைசந்து, நாடார் வீதி, நாட்டை சந்து, பாளையம் தோட்டம், திருவள்ளுவர் நகர், உப்புமண்டி, பாரதி நகர், எல்ஜி தோட்டம், முத்து மாரியம்மன் கோயில் வீதி, பட்டக்கார அய்யாசாமி வீதி, தர்மராஜா கோயில் வீதி, பஜனை கோயில் வீதி, முனியப்பன் கோயில் சந்து, செட்டிவீதி, செல்வபுரம், காட்டேரி தோட்டம், சாமி அய்யர் புது வீதி, பாலாஜி அவென்யூ, அசோக் நகர், சாவித்ரி…

Read More

கோவையில் ‘பேலட் பேப்பர்’ அச்சடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் இந்த பேலட் பேப்பர்…

Read More

27.44 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More