நாளை முதல் 85 வயதானவர்கள் தபால் ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் வீடுகளுக்கு சென்று தபால் ஒட்டு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே படிவம் 12டீ விண்ணப்பம் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் 7583 மூத்த வாக்காளர்கள் (85 வயது கடந்தவர்கள்), 1692 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. படிவத்தில் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. பூர்த்தி செய்த வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்கு பதிவு அலுவலர்…

Read More

கோவையில் ஓட்டு சாவடிகளுக்கு அழியாத மை பாட்டில்கள் வந்தது

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஓட்டு சாவடிகளில் பயன்படுத்தும் ஆவணங்களை அனுப்பி வைத்து வருகிறது . கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடி ஆவணங்கள் வந்து சேர்ந்தது . தற்போது மைசூரில் இருந்து அழியாத மை பெறப்பட்டிருக்கிறது. இந்த மை பாட்டில்கள் கோவை மேட்டுப்பாளையம் ,கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர் ,கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி, வால்பாறை…

Read More

ஜனநாயகன் படம் வெளியானதுக்கு எங்களுக்கு சம்பந்தமில்லை…அண்ணாமலை பேட்டி

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்க வழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைக்கிறார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சரியாக நடக்க வேண்டும். மக்கள் நன்றாக கவனித்து பார்க்கிறார்கள். திருமாவளவன் பொறுமையாக…

Read More

ஓட்டு போட மாட்டோம் என கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

கோவையில் கணபதி மாநகரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 35 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது. அங்கு இருந்த நிலத்தை கையகப்படுத்தி அங்கு உயர், மத்திய மற்றும் குறைந்த வருவாய் பிரிவுகளில் 1,005 வீடுகளை கட்டியது. அதற்கு உரிய தொகை உரிமையாளர்களிடம் பெறப்பட்டது. ஆனால் அதற்கான பத்திரங்களையும், தடையில்லா சான்றையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழு தொடங்கி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழுவினர் இன்று காலை தங்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் 183 வேட்பாளர்கள் போட்டி, 20 பேர் வாபஸ்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்தூரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும், சிங்காநல்லூரில் 44 பேரும், கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில்…

Read More

கோவையில் ஓட்டுக்கு பணம், பரிசு கூப்பன் தொடர்பாக 47 புகார் பதிவு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள், முறைகேடு புகார்கள் பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் இன்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பணம், பரிசு பொருட்கள் தொடர்பான நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தனர். கோவை உக்கடம், செல்வபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுக்காக பரிசாக பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்து பரிசு கூப்பன் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த புகார்கள் தொடர்பாக…

Read More

ஓட்டுச்சாவடி சீல், பேட்ச் , ஒஆர்எஸ் பாக்கெட்டுகள் வந்தாச்சு…

கோவை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 3563 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடக்க போகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 45 வகையான தேர்தல் ஆவணங்கள் வந்திருந்தது. இன்று மேலும் கூடுதலாக 20 வகையான ஆவணங்கள் பெறப்பட்டது. குறிப்பாக ஒட்டு சாவடிகளில் பயன்படுத்தப்படும் 3563 சீல், பேட்ச், லட்சம் வாக்காளர் கையேடு, 1662 மாதிரி ஓட்டு பதிவுக்கான சீல், வெப் காஸ்டிங் போஸ்டர். ஓட்டு சாவடி அலுவலர், பிஎல்ஓ, தலைமை ஒட்டு சாவடி…

Read More

கோவையில் வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று இமெயில் மூலமாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் . கலெக்டர் அறை, தேர்தல் பிரிவு மற்றும் பல்வேறு அலுவலக பிரிவுகளில் அதிகாரிகள் சோதனை இட்டனர் . இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வழக்கமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அடிக்கடி புகார் மெயில் வருகிறது….

Read More

கோவையில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் கூலி தொழிலாளி. 32 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்வதி( 26) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பார்வதி தர்பூசணி கடை நடத்தி வருகிறார்.கடந்த சில மாதங்களாக சரத்குமாருக்கு அவர் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி மனைவியிடம் அவர் வாக்குவாதம் செய்து வந்தார். நேற்று பார்வதி கடையில் இருந்தார். அப்போது அங்கே வந்த சரத்குமார் அவரிடம் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக…

Read More