புழுதி பறக்கும் லாரி…கல்குவாரிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் 160 கல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த கல் குவாரிகளின் இயக்கத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் கட்டுபாட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. குவாரிகள் அனைத்தும் கம்பி வேலி போட்டு பாதுகாப்பாக நடத்த வேண்டும். வேலியை தாண்டி கால்நடைகள், மனிதர்கள் செல்வதை தடுக்க வேண்டும். வெடி வைக்கும் உரிய வெடி மருந்து சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு, கால்நடைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு…

Read More

பார்ட் டைம் வேலை என 34.41 லட்ச ரூபாய் சுருட்டல்… சைபர் கிரைம் போலீசில் புகார்

கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர், ஆன்லைனில் வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை பார்த்தார். பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கோபிநாத்தில் பார்ட் டைம் பணிக்கு ஒப்புதல் தந்தார். அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டவர்கள் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். கோபிநாத் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 5 தவணைகளில் 7.84 லட்சம் ரூபாய் வங்கி பரிவர்த்தனையில் அனுப்பி வைத்துள்ளார். அதன்…

Read More

சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்து உச்சத்தை எட்டவில்லை. இந்த தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்த அளவே இருக்கிறது. 50 அடி கொண்ட அணையில் தற்போது 26.70 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால் முழு அளவில் குடிநீர் எடுத்து விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். ஆனால் குறைந்த…

Read More

கோவையில் பத்திர எழுத்தர் அடித்து கொலை…!

கோவை சிங்காநல்லூர் தேவேந்திர குல வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (56), பத்திர எழுத்தர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம் தேதியில் இருந்து அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது…

Read More

கோவை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு…

கோவை மாவட்டத்தில் உள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 2 Lab Technician Gr-III-3, Occupational Therapist (DEIC)-1, District Programme Manager-1, RMNCH.ACounsellor (Female Candidate only)-2, Assistant cum Data Entry Operator / DEO-1, ULB-UHN/ANM-75, Cleaner-2 ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம்…

Read More

ஆனைமலை ஆழியாறு குடிநீர் திட்டங்கள் ஆய்வு…

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் இன்று (18.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவிப் பொறியாளர் (ஆழியாறு அணை) ராஜாகண்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (பொள்ளாச்சி) செயற்பொறியாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் வரும் ஒடியங்குடி…

Read More

ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமலானது…

கோவை மாவட்டத்திவ் 18 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகிறது, பத்திரப்பதிவிற்கு ‘ஸ்டார் 2.0’ சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. பதிவு பணிகளை வேகப்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, ‘ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட ‘கிளவுட் கம்யூட்டிங்’ சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வீட்டில் இருந்தே ஆவணங்கள் தாக்கல்செய்து பதிவுகளை செய்யலாம். பயனர் ஐடி மூலமாக பொதுமக்கள் பத்திரப்பதிவுகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று அனைத்து…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்…

கோவை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இலவச மனை, பட்டா கேட்டு 404 விண்ணப்பங்கள் உள்பட 610 விண்ணப்டபங்கள் பெறப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இலவசமாக வீடு, மனை பட்டா கேட்டு 404 பேரும், வேலை வாய்ப்பு கேட்டு 13 பேரும்,…

Read More

கணவரை காணவில்லை… பெண் குடும்பத்தினருடன் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மேகலா (45) என்பவர் தனது தாய், குழந்தைகள், உறவினர்களுடன் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் பெயர் முருகன் (49), கட்டட தொழிலாளி. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், என் கணவர் சூலூர் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார்….

Read More

பச்சை மரங்களை வெட்டி போட்டாங்க… கலெக்டரிடம் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக குறை கீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த கைலாச கிரி என்பவர் அளித்த மனுவில், “முன்னாள் படைவீரராக பணியாற்றிய என் தந்தைக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு விண்ணப்பித்தும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை தாசில்தார் அலுவலகம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. ” என தெரிவித்தார். நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி கொடுத்த மனுவில், “நான் மேற்கு…

Read More