85 வயசு ஆயிடுச்சா…12ம் தேதியிலிருந்து நீங்க ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் படி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டு பதிவு நடைபெறும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வரிசையில் நின்றிருக்கும் நிலையில் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு குறிப்பிட்ட…

Read More

கோவையில் வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என நாளை மதியம் 3 மணிக்கு தெரிந்து விடும். இதற்கு பின்னர், சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) தயார் செய்ய அனுமதி வழங்கப்படும். நாளை (10ம் தேதி) முதல் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி நடத்தப்படும். அரசு அச்சகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3563 ஓட்டு சாவடிகளுக்கு ஓட்டு மெசின்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேலட்…

Read More

கோவையில் வாக்காளர் பட்டியல் ஜெராக்ஸ் எடுப்பு பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்பட 10 சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தொகுதிகளில் 318 வேட்பாளர்கள் 450 மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாற்று வேட்பாளர்கள் உள்பட 115 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது….

Read More

கோவையில் நடக்கும் பறக்கும் படை தூங்குதா..? மீட்டிங்கில் சிறப்பு பார்வையாளர் விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் அனைத்து அமலாக்க முகமைகளின் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுக்கான நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், தேர்தல் பார்வையாளர்கள், கணக்கு பார்வையாளர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த…

Read More

வாக்காளர்கள் செல்போன் நம்பர் கொடுத்தது யாருங்க… ஓட்டு கேட்டு நச்சரிப்பு…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடக்கிறது. கட்சி, வேட்பாளர்கள் தொடர்பாக ஆன்லைனில் விதிமுறை மீறல் விவகாரங்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் ‘மீடியா மானிட்டர்’ பிரிவை துவக்கி கண்காணிக்கிறது. ஓட்டு கேட்டு குவியும் பதிவுகள், செல்போன் எஸ்.எம்.எஸ் போன்றவற்றையும், விதிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் மீடியா பிரிவினர். ‘பேஸ்புக்’ இன்ஸ்டா, யூ யூடியூப் பதிவுகளில் அரசியல் விமர்சனங்களும் அதிகமாகி வருகிறது. தினமும் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்க என பல்வேறு கட்சியினர் குரல் பதிவு தொலைபேசி…

Read More

கோவை மாவட்டத்தில் இறுதி பட்டியலில் 27.44 வாக்காளர்கள்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,32,220 ஆண் வாக்காளர்கள், 1,47,924 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தினர் என 2,82,179 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,47,868 ஆண் வாக்காளர்கள், 1,59,647 பெண் வாக்காளர்கள், 101 மூன்றாம் பாலின் வாக்காளர்கள் என 3,07,616 வோக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2,05,189 ஆண் வாக்காளர்கள், 2,16,834 பெண் வாக்காளர்கள், 115 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என…

Read More

கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய 18 கரூர் வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு…!

கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவின் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி பெயரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு இன்று சரியாக பூர்த்தி செய்யவில்லை என நிராகரிக்கப்பட்டது.இதே போல் செந்தில் என துவங்கும் பெயரில் இருந்த இரண்டு வேட்பு மனுக்கள் பாலாஜி என்ற பெயரில் இருந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தெற்கு தொகுதியில் மட்டும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், அபிலாசன் ,விஜயன், பழனிவேல் ராஜபாண்டியன்,…

Read More

கோவை மாவட்டத்தில் 201 வேட்பு மனுக்கள் ஏற்பு: 249 மனுக்கள் நிராகரிப்பு…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் 5 நாட்களாக நடந்தது. இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்துாரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும். சிங்காநல்லலூரில் 44 பேரும், கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல்…

Read More

ஓட்டுக்கு பணம் தர்றாங்க… கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரால் பரபரப்பு…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல்…

Read More

செந்தில் பாலாஜி வேட்பு மனு ஏற்பு… கரூர் குரூப் சுயேச்சைகள் காலி…!

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக ,அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்பட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையாக 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் இன்று 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. உடுமலையை சேர்ந்த செந்தில் பாலாஜி என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்தார் . இவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது .படிவம் 26 ல் இவர் சரியான விவரங்களை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி இவரது மனுவை…

Read More