கோவை மாவட்டத்தில் 130 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல் நாளான 30ம் தேதி 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 2ம் தேதி…

Read More

கோவை மாவட்டத்தில் அதிக தொகை ஷேர் செய்த வங்கி கணக்குகள் பட்டியல் தயார்…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மாவட்ட அளவில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் மூலமாக கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவு பணம் ஷேர் செய்யப்பட்ட வங்கி அக்கவுண்ட் மற்றும் அதிக நபர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தனிநபர் வங்கி கணக்கு…

Read More

கோவையில் திருடர்களுக்கு பயந்து 247 கிராம் தங்க நகைகளை பேக்கில் கொண்டு வந்த போது மடக்கி பிடித்த பறக்கும் படை…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர் . மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு…

Read More

வெள்ளிங்கிரி மலையில் டிரைவர் சாவு

சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). வேன் டிரைவரான இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று கோவை வந்தார். இரவு இவர் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறினார். இரண்டாவது மலை ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் வெள்ளிங்கிரி மலை ஏறிய சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பதாக தெரிகிறது. இதுவரை ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மலையேறும்…

Read More

கோவை சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு: செல்வப் பெருந்தகை படத்திற்கு தீ வைப்பு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இளம்பெண் ஸ்ரீநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கடுமை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிதி இதற்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இருந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் . அவருக்கு தற்போது சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது .கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் போது வேறு கட்சி இருந்து வந்தவருக்கு மாநில காங்கிரஸ்…

Read More

கோவையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலி…

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் குமார் (31). பிளம்பர் இவர் மாநகராட்சி மத்திய மண்டலம் பாரதி பார்க் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் மையத்தில் மோட்டார் பம்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றும் சுரேஷ்குமார் (32) என்பவரும் இன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அர்ஜுன் குமார் மோட்டாரை சரி செய்யும் போது கழிவு நீர் தொட்டிக்குள் தவறி…

Read More

கோவை வடக்கில் வானதிக்கு வாய்ப்பு , அண்ணாமலைக்கு சீட் மறுப்பு…

அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 27 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக எதிர்பார்ப்பு நிலவியது . அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள வானதி சீனிவாசன் வடக்கு தொகுதியில் வாய்ப்பு கேட்டு…

Read More

கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய மாணவர் சாவு

தர்மபுரி மாவட்டம் பீடம் நேரி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்( 23). இவர் கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் எட்டு பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார் . அப்போது ஐந்தாவது மலைக்கு சென்ற போது இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து இறந்தவரின் சடலம் டோலி கட்டி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. நடப்பாண்டில் வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆறு பேர்…

Read More

கோவையில் தேர்தல் பறக்கும் படை சோதனை: டிபன் பாக்ஸ், பாத்திரங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான…

Read More

கோவை மாவட்டத்தில் 2 நாளில் நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அதற்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 27 பேர் மனு தாக்கல்…

Read More