கோவையில் மூதாட்டி கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை…

கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜா (35) என்கிற மகனும், அமுதா (30) என்கிற மகளும் உள்ளனர். மகள் அமுதா திருமணமாகி பாலக்காட்டில் வசித்து வருகிறார். சாந்தி மகன் ராஜாவுடன் தங்கிருந்து அதே பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். ராஜா வெல்டிங் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா வேலைக்கு…

Read More

கல்லூரி ஹாஸ்டல் கேண்டீன் உணவில் புழு, பூச்சி மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைந்துள்ளது. இங்கே மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இன்று இரவு மாணவ மாணவிகள் இட்லி தோசை சாப்பிட்டனர். அப்போது சாம்பாரில் புழு பூச்சிகள் காணப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் விடுதி வளாகத்தில் ஒன்று திரண்டனர் . கேண்டினில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருப்பதில்லை புழு பூச்சி கரப்பான்…

Read More

போலீஸ் மாஸ் ரீல்ஸ்

கோவை மாநகரில் பள்ளி, கல்லூரிகள் அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் அடிப்படையில் 8,279 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றை அப்படியே வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த காட்சிகளை ‘ரீல்ஸ்’ எடுத்து அந்த வீடியோவை மாநகர காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில்…

Read More

கல் குவாரிகளில் வெடி வைப்பதில் முறைகேடு…

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் அதிகமாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சிலர், புதிதாக குவாரிகள் துவக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குவாரிகள் துவங்க ஏகப்பட்ட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை, போலீசார் என பல்வேறு துறையினர் ஆய்வு நடத்தி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. உரிய அரசு துறைகளின் தடையின்மை சான்று பெற்று தான் உரிமம் வழங்கவேண்டும். ஆனால்…

Read More

Gas cylinder புக்கிங் தாமதம் e Kyc இல்லாததால் நெருக்கடி…

கோவை மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான இணைப்புகள் பெண்களின் பெயர்களில் இருக்கிறது. காஸ் சிலிண்டர் நுகர்வோர் தங்களது சிலிண்டர் இணைப்பிற்கு ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி என்ற அடையாள சரிபார்ப்பை முடிக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் மானியம் கிடைப்பதில் தடை ஏற்படும். காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் நேரடியாக காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று…

Read More

காலில் காயத்துடன் உயிருக்கு போராடும் நோயாளி…

கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் 60 வயது மதிக்கதக்க நபர் காலில் காயங்களுடன் கட்டு போட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இலவச சேவை ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ சேவை ஊழியர்கள் அங்கே சென்று பார்த்தனர். அவரிடம் அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வாசுதேவன் என தெரியவந்தது. இவர் ஏற்கனவே குறிச்சி குளம், வாலாங்குளத்தின் கரையில் தங்கியிருந்தவர் என தெரிகிறது. ஆதரவு இல்லாத இவர் பிச்சை…

Read More

கோவையில் 2112 கிலோ கஞ்சா தீயில் எரிப்பு…!

கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் நடவடிக்கை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது . இதில் மேற்கு மண்டலம் மாவட்டங்களில் 2112 கிலோ எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ‌ இதேபோல் 4268 போதை மாத்திரை , 103 கிராம் மெத்த பெட்டமின் மற்றும் ஊசி மற்றும் தடை செய்யப்பட்ட இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை தமிழக…

Read More

கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி மகன் அமுதன் (19). இவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் சிலருடன் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி நான்காம் ஆண்டு மாணவர்கள் வைத்திருந்த இரு கைபேசிகளை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்கள்…

Read More

நடக்க முடியாத நடை பாதைகள்

நடைபாதையை மீட்க எதிர்பார்ப்பகோவை அரசு மருத்துவமனை முன் உள்ள நடை பாதை, ஸ்டேட் பாங்க் ரோடு இரு பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. சில இடங்களில் இந்த நடைபாதையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்காமல் மாநகராட்சியினர், வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் போட்டு செல்கிறார்கள். நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் ஆங்காங்கே கான்கிரீட் தடுப்பு, ஒயர், சில இடங்களில் பேரி கார்டு…

Read More

படிக்காதவர்களுக்கு மனு எழுதி தர ஆள் இல்லை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் வாரந்தோறும் குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் வயதான, எழுத படிக்க தெரியாதவர்கள் மனு எழுதி தர முடியாமல் இருக்கின்றனர். சிலர், ரோட்டோரம் உள்ள படிவம் விற்பனை செய்பவர்களிடம் மனு எழுதி வாங்கி வருகிறார்கள். இந்த விவரங்கள் அரசு அதிகாரிகளுக்கு சரியாக புரியாத நிலையிருக்கிறது. முறையான கோரிக்கையை விட்டு பல கோரிக்கைகளை குழப்பமாக எழுதி வருவதாக தெரிகிறது. அரசு துறை அதிகாரிகள் குறிப்பாக சமூக பாதுகாப்பு துறையில் உள்ளவர்கள் மூலமாக…

Read More