கோவை சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு: செல்வப் பெருந்தகை படத்திற்கு தீ வைப்பு
கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இளம்பெண் ஸ்ரீநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கடுமை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிதி இதற்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இருந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் .
அவருக்கு தற்போது சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது .கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் போது வேறு கட்சி இருந்து வந்தவருக்கு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை சீட் வழங்கி விட்டார் .
இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் கைமாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது . எனவே செல்வ பெருந்தகை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு பதிலாக வேறொரு மாநிலத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும். மேலும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை மற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் பவன் முன்பு கட்சியினர் இன்று இரவு செல்வ பெருந்தகை போட்டோவை வைத்து தீ வைத்து எரித்து கடும் எதிர்ப்பு காட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
