அமைதியாக தேர்தல் நடத்த கொடி அணி வகுப்பு…

கோவை மதுக்கரை மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் கோவை மாவட்ட போலீசார் வரும் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

இதில் கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் 462 போலீசார் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் அமைதியாக மக்கள் எந்தவித அச்சுறுத்தல் மிரட்டல் இன்றி தைரியமாக ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான முறையில் ஓட்டு போடும் வகையில் போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில் ஊர்க்காவல் படை மற்றும் துணை ராணுவத்தினரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *