கொரோனா, அரக்கன், அமாவாசை செந்தில் பாலாஜி… கோவையில் வசைபாடிய எடப்பாடி..

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார். சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து விகேகே . மேனன் சாலை வரை ரோடு ஷோ நடத்தினார்.

அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியது ;

கொரோனா வைரஸ் நோயை விட கடுமையான ஒன்று கரூரில் இருந்து வந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரவியியது. கொரோனாவுக்கு கூட மருந்து இருக்கு. இங்கே வந்திருக்கும் வைரஸுக்கு மருந்து இல்லை,

உங்கள் வாழ்க்கையை முடித்து கூட்டி விடுவார் . கரூரை காலி செய்து கோவை தெற்கில் நுழைந்திருக்கிறார். அவரை விரட்டி அடிப்பீர்களா, கடவுள் மூளையை நல்ல சிந்தனை வளர்ப்பதற்கு கொடுத்திருக்கிறார். ஆண்டவன் தந்த மூளையை வைத்து, தவறாக சிந்திப்பது தீய எண்ணம். அவர் யார் என உங்களுக்குத் தெரியும், நான் பெயர் சொல்ல விரும்பலை, அதற்கு தகுதியில்லாதவர்.

10 ரூபாய்க்கு மதிப்பு கொடுத்தவர் குறித்து ஸ்டாலின் சொல்கிறார். கோடு போட்டா ரோடு போட்ட மாதிரி படம் எடுப்பார். இவர் கரூரில் ரோடு போடாமல் படத்தை எடுத்தவர், நான் சட்டமன்றத்தில் பேசிய பின் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது பேசிய வாய் அப்போதும் பேசியது. செந்தில் பாலாஜியை என்னவெல்லாம் பேசினீனார். இதே ஸ்டாலின் கரூரில் முன் பேசும்போது அவர் மோசமானவர் என்றார். அவரின் தம்பி ஆள் கடத்திலில் ஈடுபட்டவர் ஸ்பிரிட் கடத்தியவர் என்றார். சேரவேண்டியதை செந்தில் பாலாஜி கரெக்டாக கொடுத்துவிடுவார். இதனால் ஸ்டாலின் இப்போது அவரை புகழ் கிறார்.

ஆண்டவன நல்வது செய்வதற்கு மூளை கொடுத்திருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை மக்களை நம்பியிருக்கிறோம். திமுக வேட்பாளர் டப்பை நம்பியிருக்கிறார். ஒரு ரூபாய் செலவு செஞ்சா என்ன கிடைக்கும் என முதல் போட்டு வாபம் எடுக்கும் வியாபாரி அவர் . இப்போது பார்த்தால் கவர்ச்சியாக தெரியும், ஆனால் ஏமாந்துவிடாதீங்க அவர் ஏன் கரூரில் போட்டியிடவில்லை. நான் எடப்பாடியில் நிக்கிறேன். வேலுமணி தொண்டாமுத்தூரில் நிற்கிறார் . கரூரில் அவரை மக்கள் ஏற்கவில்லை அதனால் அவர் வெளியேறிவிட்டார்.

இவர் கரூரில் சட்டியை சுரண்டி கவுத்திட்டார். அதனால் இங்கே வந்திருக்கிறார். கோவை செல்வமான பகுதி. இந்த பகுதியில் தங்கத்துக்கு தனி முத்திரை வைக்கிறார்கள் இங்கே அவர் முத்திரை பதித்துவிட்டு போய்விடுவார் எனவே, கோவை தெற்கு தொகுதி மக்கள் விழித்துக்கொண்டால் பிழைக்கலாம்.

செந்தில் பாலாஜி டிக்கெட் அடிக்கிற மெஷினில் கூட ஊழல் செய்ததாக ஸ்டாலின் சொன்னார். இப்போது தூய்மையானவராக அடையாளம் காட்டு இருக்கிறார். இந்த 5 கட்சி அமாவாசை ஒரே 5 ஆண்டுகளில் இரண்டு கட்சி சின்னத்தில் ஜெயித்தவர். அதிமுகவில் முதலில் ஜெயித்தார் . அங்கிருந்து நீக்கினோம் திமுகவில் சேர்ந்து ஜெயித்தார்.

அரக்கனை விடக் கொடியவர், மனிதாபிமானம் இல்லாத ஒருவர் போட்டியிடுகிறார் கொங்கு மக்கள் சிந்திக்க வேண்டும்.நல்லவர்களை தேர்வுசெய்யுங்கள். தமிழகத்திற்கும் டெல்லிக்கும் பிரச்னையாம். இங்கே சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. எதற்கு டில்லியை இழுக்கிறீர்கள், அதிமுக பற்றி தவறான ஆதாரம் எதுவுமில்லை. அதனால் தான் அப்பாவும் மகனும் மாற்றி பேசுகிறார்கள்.

உங்கள் ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. அதற்கு பதில சொல்ல முடியாமல் எங்களை பற்றி பேசுகிறார்கள் . திமுக வேட்பாளராக இருப்பவர் டெண்டு கொட்டகை பட்டி போடுவார். இந்த மக்கள் மனிதர்களா அல்லது ஆடுமாடா. ஆட்டுப் பட்டியில் இரும்பு கதவு போட்டு அதில் அவரை அடைக்க போகிறோம். மக்களை வஞ்சிக்காதீர் தவறான வழியை பின்பற்றினால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஆட்களை கொண்டு வந்து அடைப்பது இதை எல்லாம் விட்டுவிட்டு, ஜனநாயக முறையில் மக்களை சந்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் எஸ் பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *