கோவையில் போலி வேட்பாளர்களால் பிரச்சனை

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் ராகுல் காந்தி. இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் நான் போட்டியிட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சில சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் தேர்தல் களத்தில் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டார்கள். அடையாள அட்டை மற்றும் பூத் ஏஜென்ட் பாஸ் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சியினருக்கு பெற்றுத் தரும்…

Read More

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 84.39 சதவீத வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 27.44 வட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒட்டு பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 6323 ஓட்டு பதிவு மெசின்கள், 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4623 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த மெசின்கள் அனைத்தும் 330 வாகனங்களில் 3540 ஓட்டு சாவடிகளுக்கு வாகனங்களின் மூலமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவ படை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மிசின்களுடன் 43 வகையான பொருட்களும்…

Read More

கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு…

கோவை மாவட்டத்தில் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. மாவட்டத்தில் 1063 வளாகங்களில் 3540 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடந்தது இந்த ஓட்டு பதிவுகளை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் ஓட்டு சாவடிகளை கண்காணித்தனர். 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. இதில் ஓட்டு சாவடிகளில் விதிமுறை மீறல் இருக்கிறதா? என 20 அலுவலர்கள்…

Read More

கோவை மாவட்டத்தில் தீவிரமாக நடந்த வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று நடந்தது மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடந்த இரு மாதம் முன்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள் நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது உள்ள பட்டியலில் சரியான வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தள் கடந்த…

Read More

கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு…!

கோவை மாவட்டத்தில் 3540 வாக்குப்பதிவு மையங்களில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 18.15 சதவீதம் வாக்கு பதிவானது. 11 மணி நிலவரப்படி 38.62 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.கடந்த காலங்களை விட தற்போது அதிக அளவு வாக்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைதியாக எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில்…

Read More

2 மணி நேரத்துக்கு ஒரு முறை ஓட்டு சதவீதம் அறிவிப்பு…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3563 ஒட்டு சாவடிகள் இருக்கிறது. இவற்றில் 183 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் உள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் நாளை ஒட்டு பதிவு நடக்கவுள்ளது, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படும். காலை 5.30 மணிக்கு ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்படும். இதில் எத்தனை ஏஜன்டுகள் இருந்தாலும் அவ்வளவு பேரும் மாடல் மெசினில் ஓட்டு போடலாம். இந்த ஒட்டுக்கள் அரை மணி நேரத்திற்குள்…

Read More

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள்…!

கோவை மாவட்டத்தில் 27.33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,32,220 ஆண் வாக்காளர்கள், 1,47,924 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தினர் என 2,82,179 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,47,868 ஆண் வாக்காளர்கள், 1,59,647 பெண் வாக்காளர்கள், 101 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 3,07,616 வாக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2,05,189 ஆண் வாக்காளர்கள், 2,16,834 பெண் வாக்காளர்கள், 115 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 4,22,138 வாக்காளர்கள் இடம் பெற்றனர். கோவை…

Read More

கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் ஓட்டு சாவடிகள்…15223 ஓட்டு மெஷின்கள் குவிப்பு …!

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெசின்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக, அதற்கென ஒதுக்கப்பட்ட ஸ்டராங்க் ரூம்களில் வைக்கப்பட்டிருந்தது . மேட்டுப்பாளையம் தொகுதிக்கு என்எல்பி பாலிடெக்னிக், சூலூர் தொகுதிக்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகம், கோவை தெற்கு தான் சட்டமன்ற தொகுதிக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,…

Read More

தெற்கு தொகுதியில் தேர்தல் ரத்தா…? பதில் தர கோவை கலெக்டர் மறுப்பு

கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக நடப்பதாக புகார் இருந்துள்ளது. திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அம்மன் அர்ஜூனன், சுயேட்சை வேட்பாளர் புகார் தொடர்பாக நேற்று கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது கலெக்டர், 30 கோடி ரூபாய் பணத்துடன் வாகனம் சென்றதா, வெளியூர் நபர்கள் தங்கியிருந்தார்களா, ஒட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. ஆனால்…

Read More

கோவை மாவட்டத்தில் மகளிர், யூத், மாடல், பசுமை ஓட்டுச்சாவடிகள்…!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிளில் 1,065 வளாகங்களில் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 31 ஓட்டு சாவடிகள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும் இங்கே ஓட்டு பதிவு நடக்காது, 3342 ஒட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடத்தப்படும். எஸ்ஐஆர் பணிக்கு முன் கூடுதல் ஓட்டு சாவடிகள் இருந்தது. இதை நீக்கம் செய்யாமல் பூஜ்ஜிய நிலை எனப்படும் செயல்பாடு நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் 360 ஓட்டு சாவடிகள், சூலூரில் 305, கவுண்டம்பாளையம்…

Read More