கோவையில் போட்டியிட கமலஹாசன் தலைமையில் ஆலோசனை…!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மற்றும் துணைத் தலைவர் மௌரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட சாத்தியம் உள்ள தொகுதிகள் குறித்து கட்சியினர் கருத்து கேட்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை கமலஹாசன் போட்டியிட்டார். இதில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இந்த தொகுதியில் அவருக்கு ஏக செல்வாக்கு இருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக கோவை தெற்கில் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை போட்டியிட வைக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அந்த மாவட்டங்களில் தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என இந்த கூட்டத்தில் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
