காந்திபுரம் பெரியார் சிலை இடமாற்றம்

கோவை காந்திபுரம் விரைவு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு காந்திபுரம் மேம்பாலம் கட்டும் பணிக்காக சிலை இடையூறாக இருப்பதாக கருதி சிறிது தூரம் இடமாற்றி அமைக்கப்பட்டது. மேம்பாலம் பணி முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில் சிலை மீண்டும் பழைய இடத்தில் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் சிலையை மீண்டும் பழைய இடத்திற்கு வைக்க அனுமதி வழங்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி அனுமதி பெற்று நேற்று இரவு பெரியார் சிலை கிரேன் உதவியுடன் மீண்டும் பழைய இடத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் சிலையை எளிதாக காணும் வகையில் பெரியார் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *