கோவையில் குடும்ப வருமானம் எவ்வளவு: புள்ளியியல் துறை விரைவில் கணக்கெடுப்பு
கோவை ராம் நகரில் உள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அதிகாரிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது
தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு (ASISSE) நடக்கவுள்ளது. இது தொடர்பான பிராந்தியப் பயிற்சி முகாம் வரும் 2 மற்றும் 5ம் தேதிகளில் நடத்தப்படும். வரும் ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்.
கோவை பிராந்திய அலுவலகம் மற்றும் திருச்சி, சேலம், தர்மபுரி துணை பிராந்திய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 105 பேர் பங்கேற்கவுள்ளனர்.
குடும்பங்களின் வாழ்வாதார நிலை மற்றும் வருமான விநியோகத்தைப் பற்றி முழுமையான மற்றும் நம்பகமான தகவல்களை பெற வேண்டும். இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் பல்வேறு சமூக குழுக்களுக்கான பொதுத் திட்டங்களும் குடியேற்ற திட்டங்களும் வடிவமைக்க பயன்படும்.
மேலும் குடும்பங்களின் நலநிலை மற்றும் அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெறும் நிலையை மதிப்பிடுவதற்கும் உதவும். இந்திய சேவைத் துறையின் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை மையமாகக் கொண்டு விரிவான தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த கணக்கெடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவை வரி வலையமைப்பு மூலம் கிடைக்கும் தரவுகளை திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களை முழுமையாகக் களப் பேராய்வு செய்யப்படும்.
மாநிலம் மற்றும் தொழில் துறை வாரியாக மொத்த மதிப்புக் கூட்டல் (GVA), நிலையான மூலதனம் மூலதன உருவாக்கம், வேலைவாய்ப்பு, ஊதியம் போன்ற முக்கிய பொருளாதாரக் குறியீடுகள் தொடர்பான கணக்குகள் மற்றும் மதிப்பீடுகளை வழங்க இது உதவும்
. 3 பயிற்சி முகாமை தேசிய புள்ளியியல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் சுனிதா பாஸ்கர், கோவை பிராந்திய இயக்குநர் வினீஷ் உள்ளிட்டோர் துவக்கவுள்ளனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள்
நுணுக்கமானவை மற்றும் பெரிய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் இதில் உட்படுத்தப்படுகின்றன. என்பதால், பதிலளிப்பவர்களின் நம்பிக்கையை வளர்ப்பது, நிலைமையைப் பொறுத்து தரவு திட்டங்களைப் பயன்படுத்துவது மற்றும் ஊடகம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்பு வழிகளைச் செயல்திறன். வாய்ந்த முறையில் பயன்படுத்துவது ஆகியவற்றில் களப்பணியாளர்களுக்கு பயிற்சி தரப்படும்.
