கோவையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை..!

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், பொன்விழா நகரை சேர்ந்தவர் நந்தகோபால் ( 40). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி உடன் வெளியே சென்று விட்டார்.

அதன் பிறகு நந்தகோபாலின் மனைவி வீட்டிற்கு திரும்பினார். 
அப்போது வீட்டில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் இருந்த ஏராளமான சில்வர் பொருட்கள் மற்றும் தங்கத்தட்டு மற்றும் பணம் ரூ.50,000 ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து நந்தகோபால் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக கொள்ளையர்கள் யார் என கண்டறிய போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிட்டு யாரும் இல்லை என தெரிந்து இரவு நேரத்தில் கைவரிசை காட்டி இருக்கலாம் என தெரிகிறது. சம்பவம் நடந்த பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *