கோவை கணுவாய் டாஸ்மாக் பாரில் புகுந்த யானை..!
கோவை கணுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு ஆண் யானை ஒன்று புகுந்தது. பாரில் இருந்த சிமெண்ட் சீட்டு மற்றும் பல்வேறு பொருட்களை உடைத்து நாசம் செய்தது
சத்தம் கேட்டு அங்கே வந்த பார் ஊழியர்கள் யானை நிற்பதை பார்த்து அலறி அடித்து ஓடினர். ஒருவர் யானை முன்பு தெரியாமல் நின்று கொண்டிருந்தார். பின்பு சுதாரித்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். தடாகம் காட்டுப் பகுதியில் இருந்து இந்த ஆண் யானை தனியாக ரோட்டில் நடந்து வந்திருப்பதாக தெரிகிறது.
தண்ணீர் தேடி வந்த யானை சிமெண்ட் கூரை போட்ட டாஸ்மாக் பாரில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. யானை வந்து சென்றது தொடர்பான வீடியோ பதிவு வைரலாக பரவியுள்ளது.
