கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்டத்தில் பீளமேடு பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த அலுவலகங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வழக்கம் போல் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மர்ம நபர் ஒருவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதே நபர் தற்போதும் இமெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் மூலமாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *