கோவை மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நிலவரம்; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் இன்று வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)தொடர்பாக ஆய்வு நடத்தினார். கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் குறிப்பாக இறந்து போனவர்கள், ஆப்சென்ட் ஆனவர்கள் முகவரியில் இல்லாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்தார் .

மேலும் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அடுத்து வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்தும் விசாரித்தார். வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களில் எவ்வளவு பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இன்னும் எவ்வளவு பேருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டியிருக்கிறது என்பது குறித்தும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு புதிதாக அமைக்கப்பட உள்ள ஓட்டு சாவடிகள் குறித்தும் விசாரித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தேர்தல் தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *