கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக எஸ்ஐஆர் பார்வையாளர் ஆய்வு..
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர் )தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் , கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணியின் போது கடந்த சில ஆண்டுகளில் இறந்த மற்றும் முகவரி மாறி சென்ற 6.5 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் . இந்த நிலையில் பெயர் சேர்க்க மேலும் அதிக வாக்காளர்கள் தொடர்ந்து விண்ணப்பம் வழங்கி வந்தனர். குறிப்பாக கடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்த அடையாள அட்டை வைத்திருந்த சிலர் தங்களது பெயர் பட்டியலில் இல்லை எனக் கூறி தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இது தொடர்பாக என்ன விசாரணை நடத்தப்பட்டது விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது என தேர்தல் பார்வையாளர் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தார் . கோவை மாவட்டத்தில் வாக்காளர்களாக இருக்க தகுதி வாய்ந்த அனைவரையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆவணங்கள் கேட்டு தொடர்ந்து அலைய வைக்க கூடாது . வரும் இறுதிப்பட்டியல் தேதி நீட்டிக்க பட்டிருக்கிறது .
எனவே வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.
