கோவை விமானத்தில் கண்ணாடி உடைத்தவருக்கு அபராதம்

கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் இன்று காலை வந்தது. விமானத்திலிருந்து இறங்கி பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது பயணி ஒருவர் அவசரமாக வந்தபோது கண்ணாடி கதவை உடைத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிய வந்தது.

அவர் அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக சூட்கேஸ் பட்டதால் கண்ணாடி கதவு உடைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *