தண்ணி வரலை.. ஓட்டு போட மாட்டோம்..

தேர்தல் புறக்கணிப்பு

தமிழக அரசே! தங்கள் ஆட்சியின் கீழ் உள்ள கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பட்டணம் ஊராட்சி மக்கள் குடிதண்ணீர் இன்றி நா வரண்டு கிடக்கின்றோம். நாதியற்ற மக்களை காப்பாற்ற வாருங்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப தர மறுக்கும் குடிதண்ணீரை உடனே பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தாருங்கள்.

உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றியோடு இருப்போம். ஜனநாயகத்தின் முக்கியம் தேர்தல் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தலை விட எங்களுக்கு உயிர் வாழ தண்ணீர் முக்கியம் எனவே தேர்தலை புறக்கணிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நமது இலக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் பெறுவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *