நெஞ்சில் ஒரே குத்து.. உயிரிழந்த தொழிலாளி..

கோவை உக்கடம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருபவர் பாசித் (36). இவர் தனது நண்பர் பிரகாஷ் (38) என்பவருடன் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த உக்கடம் பகுதியில் உள்ள ஓட்டலில் கூலி வேலை செய்து வரும் சிராஜ் (22) நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் பாசித் பின்னால் நின்ற சிராஜை கவனிக்காமல் ஆட்டோவை ரிவேர்ஸ் எடுத்துள்ளார். ஆட்டோ சிராஜ் மீது மோதியது. கோபமடைந்த சிராஜ் அவரை கண்டித்தார்.
இதில் ஆவேசமடைந்த பாசித் எனது கைகளால் சிராஜ் மீது தாக்குதல் நடத்தினார். அவரது மார்பில் வேகமாக குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சிராஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். உக்கடம் போலீசார் பாசித் மற்றும் தாக்குதலுக்கு உதவிய அவரது நண்பர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
