நொய்யல் அழகாகுமா.. ரூ. 178 கோடியில் புது திட்டம் ..!
கோவை நொய்யல் ஆற்றை நகர்ப்பகுதியில் 4.3 கிலோமீட்டர் தூரத்திற்கு சுத்தப்படுத்தி சீரமைக்க 178 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மாதிரி வடிவத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கோவை நொய்யல் ஆறு 127 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கிறது . நொய்யல் ஆறு பாயும் வழி எங்கும் சாக்கடை நீர் சாயக்கழிவு தொழிற்சாலை கழிவு என ஏகப்பட்ட கழிவு நீர் குடலை குமற்றும் நாற்றத்துடன் பாய்கிறது. இதைத் தடுக்காமல் நகரப் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட தூரத்திற்கு சீரமைத்தால் எந்த பிரயோஜனமும் கிடையாது.
இது போன்ற திட்டங்களால் பயன் கிடையாது என பொதுமக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
