பத்தாம் வகுப்பு பொது தேர்வு: அவுட் ஆப் சிலபஸ் கேள்வியால் மாணவர்கள் தவிப்பு..!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வில் 44 கேள்விகள் கேட்கப்பட்டது. வினாத்தாளில் 11 கேள்வியாக புதன்கிழமையை ஒன்றாம் தேதியாக கொண்ட நாள் காட்டியில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தமிழ் எண்ணில் தேர்க என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு க, அ, ரு, எ என நான்கு விடைகளில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாடத்திட்டத்தில் அல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு போல் இந்த கேள்வி நூதனமாக மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பெரும்பாலான மாணவர்களுக்கு பதில் தெரியவில்லை. அவுட் ஆப் சிலபஸ் இலக்கணம் மற்றும் தமிழ் தொடர்பாக எளிதான சில கேள்விகள் கேட்பார்கள்.
ஆனால் யாரும் யோசிக்க முடியாதபடி மிக கடினமாக இந்த கேள்வி இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது அரிதான நிலையை ஏற்படுத்தி விடும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் பலரும் இதற்கான விடையை சரியாக தெரியாமல் ஆன்லைன் மூலமாக உறுதி செய்தனர். தமிழகத்தில் தமிழ் தேர்வில் இந்த ஒரு கேள்வி மாணவர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
