பெத்து எடுத்தவ தத்து கொடுத்துப்புட்டா..

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்டது. இந்த குழந்தையை பெற்ற தாய் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டார்‌. ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்து குழந்தையின் தாயை தேடும் பணி நடந்தது. ஆனால் பெத்து எடுத்த தாய் குழந்தையை தேடி வரவில்லை.

காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு வினித் என பெயர் வைத்தனர். சொந்தத் தாய் வராத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலமாக தத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அழகான இந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி நிலவுகிறது. தாயை தொலைத்த இந்த சேய் விரைவில் பாசத்திற்கு ஏங்கும் புதிய தாய் மடியில் தவழும் வாய்ப்புள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *