பைக் சீட் கவர், டேங்கில் கட்டு கட்டாக பணம். ‌‌..

கோவை மதுக்கரை எட்டிமடை செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன சோதனை இன்று நடத்தினர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் சீட் கவர் பெட்ரோல் டேங்க் போன்றவற்றில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

இந்த பணத்தை ஒருவர் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. ‌ இந்த பணம் ஹவாலா மோசடியில் பெறப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இது தொடர்பாக அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது . இதில் 57 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது. எதற்காக யாருக்காக இந்த பணம் கடத்தப்பட்டது என போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டாக இது போன்று பணம் கடத்தல் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *