மன்னாதி மன்னன் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி…
தமிழகத்தின் மன்னாதி மன்னன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கோவை மாவட்டத்தில் பரவலாக அனுசரிக்கப்பட்டது. நகர் புறநகர் பகுதியில் எம்ஜிஆர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆருக்கு இருக்கும் மவுசு மிகுதியாகவே இருக்கிறது. அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தி போஸ்டர் வைத்திருந்தனர். காலத்தால் அழியாத எம்.ஜி.ஆர் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
