2191 கிலோ கஞ்சா தீயில் சாம்பல்..

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட 2191 கிலோ எடையிலான கஞ்சா இன்று மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் தீயில் போட்டு அழிக்கப்பட்டது. கோவை திருப்பூர் நீலகிரி ஈரோடு மாவட்டத்தில் 1317 வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

முறையாக கஞ்சா பண்டல்கள் அழிக்கப்பட்டதா என டி ஐ ஜி சசி மோகன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த காலங்களில் 797 வழக்கில்

1624 கிலோ எடையிலான கஞ்சா தீயில் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *