6000 முறை யானைகள் ரயில் பாதைகள் கடந்தன..

கோவை மாவட்டத்தில் மதுக்கரை எட்டி மடை இடையே ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைக்கு இடையே இரு இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இந்த ரயில் பாதையில் ரயில் மோதி 32 யானைகள் இறந்துள்ளன .
இந்த நிலையில் யானைகள் பாதுகாப்பாக ரயில் பாதை கடக்கும் வகையில் இரு இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்த சுரங்க பாதை வழியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் யானைகள் 6 ஆயிரம் முறை சென்று வந்துள்ளன இந்த சுரங்கப்பாதை அமைத்த பின்னர் யானைகள் சாவு குறைந்துள்ளன. யானைகள் நடமாட்டத்தை 24 இடங்களில் அமைக்கப்பட்ட ஏஐ கண்காணிப்பு கேமரா வழியாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் . இதனை வனத்துறை செயலாளர் சுப்பரியா சாகு ஆய்வு செய்தார்.
