கோவையில் 44 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. பல்லி உணவு குறித்து விசாரணை..!
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்து. அப்போது, உணவில் பல்லி கிடப்பதாக தெரியவந்தது. இந்த உணவை சாப்பிட்ட 31 மாணவர்கள், 13 மாணவிகள் என 44 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் உடல் நலமுடன் இருப்பதாகவும் குணமாகியவுடன்…
