கோவை கிணத்துக்கடவு மயானத்தில் சடலம் அடக்கம் செய்ய தொந்தரவு பொதுமக்கள் புகார்
கோவை கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள சிக்கலாம்பாளையம், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளுக்கு கிணத்துக்கடவு சொலவம்பாளையம் கிராமத்தில் மயான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் எங்கள் வழக்கப்படி பல தலைமுறைகளாக இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றோம். இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி உள்ளது. மயானத்திற்கு ஆரம்ப காலத்தில்…
