திமுக கூட்டணியில் நாளை பேச்சு வார்த்தை:கொமதேக ஈஸ்வரன் தகவல்..
கோவை கொடிசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, “திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தைக்காக நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அங்கு செல்கிறோம். அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான சீட்கள் குறையும் என்று தகவல்கள் வெளியானது குறித்த கேள்விக்கு, “திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று தெரியவில்லை. எவ்வளவு தொகுதிகள் கேட்போம் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டு அறிவிக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி…
